Try GOLD - Free
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!
Dinamani Madurai
|September 02, 2025
இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக்கண்டும் அமைதியாகக் கடந்துபோகும் மௌன சாட்சிகளாக நாம் இருக்கிறோம். இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக தற்போது சட்டங்கள் ஏராளமாக இயற்றப்பட்டுள்ள போதிலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது.
இதுபோன்ற வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பள்ளிகளில் படித்து வருகிற சிறுமிகளாக இருப்பது சமுதாயப் பேரவலமாக இருக்கிறது.
'யுனிசெஃப்' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தனது அறிக்கை ஒன்றில் ஆண்டுக்கு சராசரியாக 73.6 கோடி இளம் வயதுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய துணைவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகிறது.
உலக அளவில் 11 முதல் 15 வயதுடைய சிறுமிகள் குறிப்பாக ஏழ்மையான மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே பாலியல் வன்கொடுமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அண்மையில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டிலும், நிலையான நீடித்த வளர்ச்சி இலக்குகளிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு எதிரான சுரண்டல், துஷ்பிரயோகம், அனைத்து வகையான வன்முறை மற்றும் சித்திரவதையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நெறிமுறை விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் குழந்தைகளை தவறாகச் சித்தரிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
This story is from the September 02, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Madurai
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Madurai
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Madurai
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Dinamani Madurai
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Madurai
புதிய வருமான வரிச் சட்டத்துக்கு தயாராகுங்கள்: அதிகாரிகளுக்கு நேரடி வரிகள் வாரியத் தலைவர் அறிவுறுத்தல்
புதிய வருமான வரிச் சட்டத்துக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் தயாராக வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியத் (சிபிடிடி) தலைவர் ரவி அகர்வால் அறிவுறுத்தினார்.
1 min
January 05, 2026
Dinamani Madurai
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Dinamani Madurai
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Madurai
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Madurai
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Translate
Change font size
