कोशिश गोल्ड - मुक्त
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!
Dinamani Madurai
|September 02, 2025
இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக்கண்டும் அமைதியாகக் கடந்துபோகும் மௌன சாட்சிகளாக நாம் இருக்கிறோம். இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக தற்போது சட்டங்கள் ஏராளமாக இயற்றப்பட்டுள்ள போதிலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது.
இதுபோன்ற வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பள்ளிகளில் படித்து வருகிற சிறுமிகளாக இருப்பது சமுதாயப் பேரவலமாக இருக்கிறது.
'யுனிசெஃப்' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தனது அறிக்கை ஒன்றில் ஆண்டுக்கு சராசரியாக 73.6 கோடி இளம் வயதுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய துணைவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகிறது.
உலக அளவில் 11 முதல் 15 வயதுடைய சிறுமிகள் குறிப்பாக ஏழ்மையான மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே பாலியல் வன்கொடுமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அண்மையில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டிலும், நிலையான நீடித்த வளர்ச்சி இலக்குகளிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு எதிரான சுரண்டல், துஷ்பிரயோகம், அனைத்து வகையான வன்முறை மற்றும் சித்திரவதையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நெறிமுறை விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் குழந்தைகளை தவறாகச் சித்தரிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
यह कहानी Dinamani Madurai के September 02, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Madurai
தேசியமும் தர்மமும் காக்க...
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
3 mins
January 07, 2026
Dinamani Madurai
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Madurai
பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
1 min
January 07, 2026
Dinamani Madurai
சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்
134 ரன்கள் முன்னிலை
1 mins
January 07, 2026
Dinamani Madurai
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Madurai
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Madurai
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Madurai
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Madurai
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Translate
Change font size
