பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!
Dinamani Madurai
|September 02, 2025
இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக்கண்டும் அமைதியாகக் கடந்துபோகும் மௌன சாட்சிகளாக நாம் இருக்கிறோம். இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக தற்போது சட்டங்கள் ஏராளமாக இயற்றப்பட்டுள்ள போதிலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது.
இதுபோன்ற வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பள்ளிகளில் படித்து வருகிற சிறுமிகளாக இருப்பது சமுதாயப் பேரவலமாக இருக்கிறது.
'யுனிசெஃப்' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தனது அறிக்கை ஒன்றில் ஆண்டுக்கு சராசரியாக 73.6 கோடி இளம் வயதுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 51 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய துணைவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகிறது.
உலக அளவில் 11 முதல் 15 வயதுடைய சிறுமிகள் குறிப்பாக ஏழ்மையான மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே பாலியல் வன்கொடுமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அண்மையில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநாட்டிலும், நிலையான நீடித்த வளர்ச்சி இலக்குகளிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளுக்கு எதிரான சுரண்டல், துஷ்பிரயோகம், அனைத்து வகையான வன்முறை மற்றும் சித்திரவதையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நெறிமுறை விதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் குழந்தைகளை தவறாகச் சித்தரிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
Diese Geschichte stammt aus der September 02, 2025-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Madurai
கலப்படம் தடுக்க புதிய பால் கொள்கை: தமிழக அரசு முடிவு
பாலில் கலப்படத்தை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Madurai
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Madurai
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Madurai
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Madurai
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Madurai
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Madurai
மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் பெண் எம்எல்சி
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸை சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பிரக்ஞா சாதவ் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தார்.
1 min
December 19, 2025
Dinamani Madurai
அடிலெய்டு டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
1 min
December 19, 2025
Dinamani Madurai
மன மாற்றமே முதல் வெற்றி
வாழ்க்கையில் வெற்றி என்பது நேராகச் செல்லும் பாதை என்று நாம் பொதுவாக நினைத்துக் கொள்கிறோம்.
2 mins
December 19, 2025
Translate
Change font size

