Newspaper
Dinakaran Nagercoil
தொழிலாளி உட்பட 2 பேர் படுகாயம்
வெள்ளிச்சந்தை அருகே கடியப்பட்டணம் தோமையார் தெருவை சேர்ந்தவர் வெனான்சியஸ் (50). மீன்பிடி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வெள்ளிச்சந்தையில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த அதிஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக வெனான்சியஸ் மீது மோதியது.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
அகமதாபாத் விமான விபத்தில் சினிமா இயக்குனர் பலியானது எப்படி?
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. அகமதாபாத் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்ததால், மாணவர்கள் பலர் பலியாகினர்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
மேற்குவங்க இடைத்தேர்தலில் வெற்றி கொண்டாட்டத்தில் குண்டு வீசிய சிறுமி பலி
மேற்குவங்கத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத் தில் குண்டு வீசியதில் 13 வயது சிறுமி பலியானார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
முதியோர் காப்பக பலி 6 ஆக உயர்வு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தர பாண்டியபுரம் அடுத்த கீழபட்டாகுறிச்சியில் செயல்பட்ட அன்னை முதியோர் காப்பகத்தில் கடந்த 11ம் தேதி உணவு சாப்பிட்டவர்களில் கம்மாள் (55), அம்பிகா (40) ஆகிய 3 பேர் கடந்த 12ம் தேதியும், தென்காசி அரசு மருத்துவமனையில் தனலட்சுமி (70) என்பவர் கடந்த 13ம் தேதியும் இறந்தனர்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
குவீன்ஸ் கிளப் டென்னிஸ்
லெஹெக்காவை வீழ்த்தி மகுடம் சூடிய அல்காரஸ்
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
நடப்பாண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்ப பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
சென்னை ஜி.என். செட்டி சாலையில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை கலைவாணர் வளாகத்துக்கு மாற்றம்
குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, ஜி.என். செட்டி சாலையில் அமைந்திருந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சிலை கலைவாணர் அரங்க வளாகத்திற்கு மாற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
மத மோதலை தூண்டும் வகையில் பேச்சு காவல்துறை விசாரணைக்கு எச். ராஜா ஆஜராக வேண்டும்
மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை நோட்டீசுக்கு எதிரான அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
சாதி ரீதியாக கொடுமை ; பதவிக்கு பணம் மாவட்ட செயலாளரிடம் நிர்வாகி மோதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் வடக்கு மாவட்ட செயலர் சத்தியா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது, ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகரும் ஓவியருமான ஹரிஸ் (45), திடீரென அங்கு வந்து தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை மாவட்ட செயலாளர் தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நீண்டநேரம் தகராறில் ஈடுபட்டுள்ளார். போலீசார் தலையிட்டு பேசியபின் ஹரிஸ் அங்கிருந்து சென்றார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
பூஆயுதப்பூஜை நடத்த ரூ.17 லட்சம் வசூல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தம்பிராஜ் (75). இவர் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் ஒரு புகார் மனு செய்தார்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
வங்கக்கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை
வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் 28ம் தேதி வரை யில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
1 min |
June 24, 2025
Dinakaran Nagercoil
தாயின் கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகாத உறவால் கூலிப்படை ஏவி கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி
திருமணமான ஒரு மாதத்தில் கணவரை கூலிப்படை ஏவி கழுத்தறுத்து அவரது மனைவி கொலை செய்துள்ளார்.
1 min |
June 24, 2025

Dinakaran Nagercoil
அயனி மரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் மலை தேனீக்கள்
அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
50,750 தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்ய இலக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் 2025-26ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவர்களுடைய வாழ்வாதாரம் உயரவும், காலநிலை மாற்றத்திற்குகேற்ப பல் வேறு மாற்று விவசாயம் மேற்கொள்வதை ஊக்கு விக்கவும், வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் உபயோகப்படுத்தவும் மானியங்கள் அறி வித்துள்ளார்.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் திருட்டு
கைதான கும்பலின் கூட்டாளிகள் கைவரிசை
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
மாற்று விவசாய கருத்தரங்கம்
ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் அமைப்பு மற்றும் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து அவகோடா, ஜாதிக்காய், மிளகு சாகுபடி குறித்த மாற்று விவசாயம் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தலைவர் டாக்டர் சி.கே. மோகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம். தமிழ்மாறன் வரவேற்றார்.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
அழகப்பபுரத்தில் அயலக தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்க கூட்டம்
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அரசு நல வாரியம் மற்றும் மக்கள் நலத்தொண்டு நிறுவனத்தின் சார்பில் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை மகிழ்ச்சி
திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை என்ற சிறு கிராமத்தில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கில படிப்பை திருத்தணி சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் முடித்துள்ளார். தொடர்ந்து எம்.ஏ மற்றும் எம்.பில் படிப்பை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பி.ஏ மற்றும் எம்.ஏ இரண்டிலும் தங்க பதக்கத்துடன் முதல் திருநங்கை மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சி படிப்பை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
குழித்துறை நகராட்சி
உலக யோகா தினத்தை முன்னிட்டு குழித்துறை நகராட்சியில் அனைத்து பணியாளர்களுக்கும் யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இயந்திர மீன் பிடி படகுகளில் பணியாற்றுவதற்காக ஈரான், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.
3 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
ஜூலை 1 இந்திய கடற்படையில் இணையும் ஐஎன்எஸ் தமால்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால் வரும் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைய உள்ளது.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
கர்நாடகாவில் இருந்து 13,000 கனஅடி நீர்வரத்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 18,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் அருவியில் குளிக்க 3வது நாளாக தடை
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
பத்மநாபசுவாமி கோயிலில் பால் திருட்டு
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கடந்த சில வாரங்களுக்கு முன் 13 பவுன் தங்கம் மாயமானது. சில நாட்களுக்குப் பின்னர் கோயில் வளாகத்திலேயே மண்ணில் புதைந்த நிலையில் இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
வணிக ரீதியிலான பலா ரகங்களை ஊக்குவிக்க ஹெக்டருக்கு ரூ.18 ஆயிரம் மானியம்
ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் 2025-26ம் ஆண்டில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம், பனை மேம்பாட்டு இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
சேலம் போலீஸ் ஸ்டேஷனில் பூஜை செய்த திருநங்கைகள்
சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு கடந்த 20ம்தேதி இரவு 8 மணியளவில் திருநங்கைகள் சிலர் ஆட்டோவில் வந்தனர். பின்னர் அவர்கள் தட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர்.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை
சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமையவிருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
கூட்டணி விவகாரத்தில் திமுக முடிவை ஒற்றோம்?
மத கலவரம், மத சாயம் ஆகியவற்றை மட்டுமே பாஜ நம்பி உள்ளது என்று செல்வப்பெருந் தகை கூறினார்.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
கனிம வளங்கள் தட்டுப்பாட்டால் கட்டுமான தொழில் முடக்கம்
முதல்வருக்கு ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபர் மனு
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
இந்திய அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம்
நாகர்கோவில், ஜூன் 23: கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி தவணைத்தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1 min |