CATEGORIES
فئات
வேலம்மாள் போதி வளாக மாணவர்கள் சாதனை
தேசிய திறனாய்வுத் தேர்வில்
கரோனாவை தடுக்க மருத்துவமனைகளுக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் உதவி
சென்னை: மக்களுடன் எப்போதும் உறுதுணையாக நிற்கும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம், கரோனா பேரிடர் 2-வது அலையால் பலரின் வாழ்வு சீர்குலைந்துள்ள நிலையில், அவர்களுக்காக இடையறாது பணியாற்றும் மருத்துவமனைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
அலோபதி நிரந்தர நிவாரணம் அளிக்குமா? ஐஎம்ஏ-வுக்கு ராம்தேவ் 25 கேள்விகள்
புதுடெல்லி: யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், அலோபதி மருத்துவம் என்பது முட்டாள் தனமான அறிவியல். அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் கரோனாவை குணப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டன. இதற்கு பதிலான ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்" என்றார்.
விவசாயிகளின் கருப்பு தின போராட்டம் காங்கிரஸ் உட்பட 12 கட்சிகள் ஆதரவு
புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வரும் 26-ம் தேதியுடன் 6 மாதத்தை நிறைவு செய்யவுள்ளது.
காங். தலைவர் கமல்நாத் மீது ம.பி. போலீஸார் வழக்கு பதிவு
இந்தியாவுக்கு எதிராக விமர்சனம்
தண்டரையில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்
தடுப்பூசி செலுத்துவதில் அக்கறை இல்லை மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி.
ஆதரவற்றவர்கள், நோயாளிகளுக்கு விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தினமும் உணவு
செங்கல்பட்டு விஜய் ரசிகர் மன்றம் சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தினமும் நோயாளிகள், அவரது உறவினர்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்காணிக்க சுகாதாரத் துறையினருக்கு சிறப்பு பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் லேசான பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவும் சுகாதாரத் துறையினருக்கு சிறப்பு பயிற்சிகள் நேற்று அளிக்கப்பட்டன.
தளர்வு இல்லாத ஊரடங்கு அமலாவதால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
41 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து விடுவிப்பு
புதுடெல்லி 41 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவையாற்றி வந்த ஐஎன்ஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படை சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
86 ரயில்வே மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் ஆலை
ரயில்வே துறை நடவடிக்கை
தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க தாரேஸ் அகமது தலைமையில் குழு அமைப்பு
சென்னை தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் அளவை மத்திய அரசு அண்மையில் அதிகரித்துள்ளது.
கருப்பு பூஞ்சைக்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி கடிதம்
ஆந்திர பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் காணொலி மூலம் ஆளுநர் இன்று உரை
அமராவதி : ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டம் இன்று அமராவதியில் உள்ள சட்டப்பேரவையில் நடைபெற உள்ளது. ஆந்திர வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே ஒரு நாள் பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெகிறது.
கேரளாவில் ஷைலஜாவுக்கு இடமளிக்காததால் சர்ச்சை
கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்கிறார். மார்க்சிஸ்ட் சார்பில் அமைச்சர்களாக பதவியேற்போர் பட்டியலில் கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து கரோனா தொற்றை சிறப்பாக கையாண்டதாக பாராட்டு பெற்ற கே.கே.ஷைலஜாவுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடமளிக்கவில்லை.
அந்தமானில் நாளை தொடங்குகிறது - கேரளாவில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை
வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரள புதிய அமைச்சரவையில் முதல்வரின் மருமகன் உட்பட 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு
இப்போதைய அமைச்சர்கள் யாரும் இடம்பெறவில்லை
சிங்கப்பூர் வைரஸால் 3-வது அலை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் எச்சரிக்கை
புதுடெல்லி: கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும். ஆனால் அண்மைக் காலமாக அங்கு சிறாரிடம் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு பணியில் கிராமங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்
ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கியது மத்திய அரசு
கரோனா தடுப்புக்கு 50 சதவீதம் செலவிட அனுமதி
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கரோனா எதிர்ப்பு மருந்து '2டிஜி' அறிமுகம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கரோனா எதிர்ப்பு மருந்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.
ஆன்லைனில் சட்ட விரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்ற 3 பேர் கைது
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்று வருகின்றனர். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
விருப்ப உரிமை நிதியில் இருந்து கரோனா தடுப்பு பணிக்கு ஆளுநர் புரோஹித் ரூ.1 கோடி
பொது நிவாரண நிதிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்
ராம்கோ சிமென்ட்ஸ் தொழிற்சாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடக்கம்
ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், விருதுநகர் மாவட்டத்தில், ராமசாமி ராஜா நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் பொது மக்களின் நலனுக்காக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.
பொறுமையால் கிடைத்த வெற்றி
சாக்ஷி மாலிக், வினேஷ் பொகட் போன்ற இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீராங்கனைகளின் வரிசையில் இப்போது சீமா பிஸ்லாவும் இணைந்துள்ளார். டோக்கியோவில் இன்னும் 2 மாதங்களுக்கு பிறகு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சீமா பிஸ்லா.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடு வீடாக பரிசோதனை நடத்த வேண்டும்
உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தகவல்
சிங்கப்பூரிலிருந்து வந்த 244 சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பும் பணி விரைவில் தொடங்கும்
சிப்காட் அதிகாரிகள் தகவல்
கரோனா நிவாரண நிதியாக ரூ.11.39 கோடி திரட்டிய கோலி அனுஷ்கா தம்பதி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து கடந்த வாரம் கரோனா நிவாரண நிதியாகரு.7 கோடி திரட்ட முடிவு செய்தனர். இதற்காக கெட்டோ எனும் இணைய தளம் மூலம் 7 நாட்கள் பிரச்சாரம் செய்தனர். இதில் முதல் பங்களிப்பாக கோலியும், அனுஷ்காவும் இணைந்துரு 2 கோடி வழங்கினர்.