CATEGORIES
"பந்து கம்பெனியை மாற்ற வேண்டும்”
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.ன் 17ஆவது சீசன் கடந்த மாதம் சென்னையில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
யூனியன் வங்கியின் புதிய டிஜிட்டல் வலயங்கள்
டிஜிட்டல் வங்கியியல் சேவைகளினூடாக வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், யூனியன் வங்கி தனது முதலாவது டிஜிட்டல் வலயத்தை, கொழும்பு 3இல் அமைந்துள்ள தனது தலைமையகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
"தடுப்புச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு"
நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்புச் சுவர் நிர்மாணிப்பதற்கு இரண்டாம் கட்டமாக 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் வியாழக்கிழமை (18) தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதானம்
2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை, புகையிலை, மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்புக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.
"புறக்கோட்டையில் கடத்தல்காரர்கள் குழு”
கடத்தல்காரர்கள் கொழும்பு நகரில் அனுமதியற்ற கட்டுமானங்களை தினசரி வாடகைக்கு குத்தகைக்கும் விடல்.
7 இலட்சம் பயணிகள் சுற்றுலா வருகை
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 718,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடலில் குழந்தை பிரசவம்
யாழ்ப்பாணம்-நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.
தேர்தல்களை பிற்போடுவது “நம்பிக்கைக்கு பாதிப்பு”
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு
பற்பசையில் ஆபாதைப்பொருள்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிராகரித்தது ஹமாஸ்
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், பணயக் கைதிகளை மீட்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.
“நான் இருந்திருந்தால் நடந்திருக்காது”
நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான் ஈரானின் தாக்குதல் நடந்திருக்காது என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ லயன்ஸ் கழகம் வெற்றி
காவத்தை ஸ்ரீ ஜெய் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் முதலாவது தடவையாக நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் காவத்தை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
க்ரிஃபிண்டோரின் வசமானது கிண்ணம்
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கிடையில் வருடந்தோறும் நடைபெறும் வலைப்பந்தாட்ட கிண்ணத்தை க்ரிஃபிண்டோர் அணியினர் தம்வசப்படுத்திக் கொண்டனர்.
குடும்பஸ்தர் வைத்தியசாலை அனுமதி
வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
இடுகாட்டில் அமர்ந்து போராட்டம்
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை ஹரிங்டன் தோட்ட மக்கள், பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்திருந்த பொது மயானத்தில் அமைப்பட்டிருந்த கல்லறைகள் உடைக்கப்பட்டு அங்கு 'பெகோ' இயந்திரங்கள் ஊடாக பொது மயான அடையாளத்தை அழித்து வருவதாக கூறி, இடுகாட்டில் குவிந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றில் புதன்கிழமை (17) ஈடுபட்டனர்.
வடக்கில் புதிய வீட்டுத் திட்டம்
வடக்கு மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான சிக்கலை நிவர்த்திக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு வ அமைய புதிய வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது என ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
“விழிப்பாக இருக்கவும்”
குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில், எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
"50% க்கு மேல் ஆதரவிருந்தால் நிறுத்துக”
வடக்கு-கிழக்கிலும், வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 சத வீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ரூ.1900க்கு கொத்து ரொட்டி: முதலாளிக்கு சரீர பிணை
கொழும்பு, வாழைத்தோட்டம் புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்கச் சென்றிருந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.
I2 மாவட்டங்களில் 10.765 திட்டங்கள்
பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“அரசியல் கைதிகளை விடுவிக்கவும்”
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்ட முழுமையாக நீக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இரவு டேஸ்ட் கடைகளில் புற்றுநோய் சுவையூட்டிகள்
சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஜே.கே.எம்.அர்ஷாத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் கடந்த சில தினங்களாக முன்னெடுத்து வருகின்றனர்.
பாலிதவின் இறுதி ஆசை
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
"21/4 குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்போம்”
தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு
3 நாட்களுக்கு ரூ.45 மில். செலவு
முக்கியமான வினாக்களுக்கு மீண்டும் பதில் கிடைக்காமல், அர்த்தமில்லாத செயற்பாடாக அமைந்துவிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது உண்மைகள் வெளிவராமை, நீதி நிலைநாட்டப்படாமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் மனச் சஞ்சலத்துக்கு உள்ளாகி காணப்படுகின்றனர்
கற்பிட்டி உதைபந்தாட்ட தொடர் சம்பியனானது யுனைட்டட்
கற்பிட்டி பேர்ல்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அணிக்கு 07 பேர் கொண்ட கற்பிட்டி உதைபந்தாட்ட லீக்- 2024 தொடர் கடந்த 13 ஆம் 14 ஆம். திகதிகளில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
காசாவை தாக்கிய இஸ்ரேல்
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது.
“ரூ.200 கோடி” சொத்தை தானம் கொடுத்த தம்பதி
குஜராத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தம்பதி தங்களின் ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு துறவறத்தை ஏற்றுள்ளனர். மேலும், அவர்கள் விரைவில் ஆன்மீக பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
திடீர் சோதனை
ணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் ஆலோசணைக்கு இணங்க காரைதீவு பிரதேச பல்வேறுபட்ட உணவுகள் கையாளும் நிறுவனங்கள், மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள், மற்றும் சமயஸ்தலங்களில் சித்திரை பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் பரிசோதனைகள் இடம்பெற்றன.
யாழில் ஒருவர் திடீரென மரணம்
யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த