CATEGORIES
பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்
பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதகை, தாளவாடியில் பலத்த மழை
கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஊரக - நகரப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை: அரசுத் துறைச் செயலர்கள் நேரில் கள ஆய்வு
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் துறைகளின் செயலா்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.
ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்
‘மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது ஆளும் திரிணமூல் காங்கிரஸ்’ என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.
மணிப்பூர் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு வெள்ளிக்கிழமையுடன் (மே 3) ஓராண்டு நிறைவு பெற்றது.
மும்பையை முடக்கினார் ஸ்டார்க்
மும்பை, மே 3: ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில்கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 24 ரன்கள் வித்தியா சத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வென்றது.
இறுதி ஆட்டத்தில் இன்று மோதும் மோகன் பகான் - மும்பை சிட்டி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. 62,000 போ் அமரும் வசதி கொண்ட கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
'ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்'
ரஷிய எல்லைக்குள் தாக்குதல் நடத்த தங்களது ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளாா்.
நிலவில் மாதிரிகளைச் சேகரிக்க விண்கலத்தை அனுப்பியது சீனா
நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு கொண்டுவருவதற்காக விண்கலத்தை சீனா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தியது.
சேலம் சந்தைக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு
கோடைகால சீசனையொட்டி, சேலம் சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
ஐபிஎல் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்ய முடியாது
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை, ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்ய முடியாது என்று இந்திய கேப்டன் ரோஹித் சா்மா வியாழக்கிழமை கூறினாா்.
ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
பாலியல் குற்றச்சாட்டு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தேடப்படும் நபராக (லுக் அவுட்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல பாஜக
ராஜ்நாத் சிங்
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றப்படும் என்பது போன்ற பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக வியாழக்கிழமை புகாரளித்தது.
ஜூனில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த திட்டம்: கொள்கைக் குறிப்புகளை இறுதி செய்யும் பணி தீவிரம்
தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் மாதம் நடத்துவதற்காக அரசுத் துறைகள் தயாராகி வருகின்றன.
'நம்ம யாத்ரி' கால் டாக்ஸி செயலி அறிமுகம்
சென்னையில் அண்ணா பல்கலை. மாணவா்களால் உருவாக்கப்பட்ட ‘நம்ம யாத்ரி’ கால் டாக்ஸி (வாடகை வாகனம்) செயலி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்
பரமத்திவேலூரில் 112 டிகிரி பதிவு
ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நீட் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு
நீட் தேர்வு 2024-க்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா கட்டுமானப் பணி: இந்தியா கடும் கண்டனம்
இந்திய எல்லைக்குள்பட்ட ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு இந்தியா சாா்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!
உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (மே 3) முடிவடையும் நிலையில், இரு தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை வேட்பாளா்களை அறிவிக்காமல் காங்கிரஸ் அமைதி காத்தது.
பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு வாய்ப்பு மறுப்பு; மகனுக்கு தொகுதி ஒதுக்கீடு
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நாளைமுதல் 'அக்னி' வெயில்
கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திர வெயில்’ எனும் கத்திரி வெயில் சனிக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.
இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்: அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்
இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந் தனர்.
பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்
பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீர் வீணாக வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் விரைவில் புதிய மதகுகளைப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் தயாராக உள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாய்லாந்தில் தமிழர்கள் நினைவைப் போற்றும் நடுகல் திறப்பு
தாய்லாந்தில் அங்கு வாழ்ந்த தமிழா்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நடுகல் திறந்து வைக்கப்பட்டது. இதனை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் நேரில் திறந்து வைத்தனா்.
சென்னையை வென்றது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.