कोशिश गोल्ड - मुक्त
என்னவாகும் தமிழ்நாடு?
Kanmani
|August 20, 2025
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

தமிழர்கள், சீனர்கள், ஆரியர்கள், அரபியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள்.
கிரேக்கர்கள் மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.
ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத் தகுதி அற்றவர்கள் எனக் கருதினர். அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை ஊமையர்கள் எனவும் கூறினர்.
ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்றும் மற்றவர்களை கீழானவர்களாகவும் கருதினர்.
சீனர்கள் தங்களை முதலாளிகளாகவும் மற்றவர்களை அடிமைகளாகவும் நடத்தினர்.
தமிழர்கள் மட்டும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றனர். ஏனென்றால், தமிழர்கள் மட்டும்தான் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தெரிந்தவர்கள்- இது சமூக வலைத்தளங்களில் சுற்றும் பதிவு.
இதில் பெருமளவு உண்மை உண்டு. தமிழர்கள் தங்கள் தனித்த மொழி, வாழ்வியல், பண்பாடு மூலம் மாறுபட்ட மக்கள் கூட்டமாக வாழ்ந்தனர். எனவே, தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மோதி அழிக்க முடியாது என்பதற்காக மொழியை அழிக்க முயன்றனர். கலகம் விளைவித்து கவிழ்க்க முடியாததால் கலாச்சார குழப்பம் ஏற்படுத்தினர்.
அந்த முயற்சியின் தொடர்ச்சிதான் ஹிந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பு, இந்துத்துவ பண்பாட்டு இணைப்பு, வடவருக்கான தொழில்-வேலை வாய்ப்பு நுழைப்பு.
மூன்றாம் மொழி என்ற புதிய கல்விக்கொள்கை தமிழர்களை குறிவைத்து விடப்பட்ட அம்பு. சிந்து நதி முதல் கீழடி வரை இந்தியாவில் பரவிக்கிடந்தது தமிழர் நாகரீகம் என்பது அந்நியர்களும் ஒப்புக்கொள்ளும் ஆய்வு முடிவு.
ஆனாலும், இந்திய ஒன்றியத்தில் சமஸ்கிருதம் தான் பழமையான மொழி என்று புனைவு பரப்பப்படுகிறது. அண்மையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் “சமஸ்கிருதம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய். அது மேலும் வளர வேண்டும் என்றால், மக்களின் அன்றாட தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் மாற வேண்டும், அனைவரும் சமஸ்கிருத மொழியை பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.
यह कहानी Kanmani के August 20, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kanmani से और कहानियाँ

Kanmani
இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.
2 mins
August 20, 2025

Kanmani
களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.
1 mins
August 20, 2025

Kanmani
மலையை ஆக்கிரமிக்கும் காங்கிரீட்காடுகள்... சரிக்கும் இயற்கை!
மனிதர்களின் நாசவேலை வகைவகையாய் தொடர்வதால் இயற்கையின் சீற்றம் பலவிதமாக வெளிப்படுகிறது.
2 mins
August 20, 2025

Kanmani
என்னவாகும் தமிழ்நாடு?
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.
4 mins
August 20, 2025

Kanmani
SQR தெரியுமா?
படிச்சது நல்லா நினைவில் இருக்கணும்னா என்ன செய்யணும்? உங்க கேள்வியிலேயே பாதி பதில் ஒளிஞ்சிருக்கு. 'படிச்சாலே' போதும், அது தன்னால நினைவில் இருக்கும்.
4 mins
August 20, 2025

Kanmani
புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!
முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
2 mins
August 20, 2025

Kanmani
இருமனம் இணைந்திடும்...
அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.
4 mins
August 20, 2025

Kanmani
சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.
4 mins
August 20, 2025

Kanmani
பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... \"பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.
3 mins
August 20, 2025

Kanmani
தக்காளியிலிருந்து உருவானதா உருளைக்கிழங்கு?
இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது.
1 mins
August 20, 2025
Translate
Change font size