Facebook Pixel அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்! | Dinamani Chennai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!

Dinamani Chennai

|

September 05, 2025

உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.

- இளங்கோ கட்டிமுத்து

ஆண்டுதோறும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5), அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவர் தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். இவர் அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும், தன்பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார்.

தன் முதல் பணியை சென்னை மாநில கல்லூரியில் தொடங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து, நீண்ட காலமாக தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 'சர்' பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு, இவருக்கு 1954-இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய போது, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை, ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாட அனுமதி கோரி அவருடைய மாணவர்கள் அவரை அணுகியபோது, 'எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனது பெருமைக்குரிய பாக்கியமாக இருக்கும்' என்ற கோரிக்கையைப் பரிந்துரை செய்தார். அதன்படி, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ளவர் குரு. நமக்கு இந்த உலகைக் கற்பிக்கும் ஆசான். நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். பெற்றோர் சொல்வதைவிட ஆசிரியர் சொல்வதைத்தான் மாணவர்கள் கேட்பார்கள். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்.

MÁS HISTORIAS DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

கன்னட நடிகர் திலீப்ராஜ் மாரடைப்பால் காலமானார்

கன்னட நடிகர் திலீப்ராஜ் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Chennai

உப்பூர் மின் திட்டம் உடன்குடிக்கு மாற்றம்: விவரங்களை புதிய அரசிடம் சமர்ப்பிக்க மின்வாரியம் முடிவு

உப்பூர் மின் திட்டத்தை உடன்குடிக்கு மாற்றம் செய்வதற்கான விவரங்களை புதிய அரசிடம் சமர்ப்பிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

உலக கால்நடை மருத்துவ தினம்

time to read

1 min

May 14, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தவெகவுக்கு ஆதரவு ஏன்? எஸ்.பி. வேலுமணி பதில்

மக்கள் அளித்த பெரும்பான்மைக்காக தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றும், பதவி ஆசைக்காக இதை செய்யவில்லை என்றும் எஸ். பி. வேலுமணி கூறினார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Chennai

பஜாஜ் குழுமத்தின் 100 ஆண்டுகால சேவை!

பிரதமர் மோடி புகழாரம்

time to read

1 min

May 14, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

போதை மருந்து கடத்தல் தீவிரவாதி இக்பால் சிங் போர்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்

என்.ஐ.ஏ. கைது செய்தது

time to read

1 min

May 14, 2026

Dinamani Chennai

முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, கண்டனம் தெரிவித்து முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும்

வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உறுதி

time to read

1 mins

May 14, 2026

Dinamani Chennai

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து

தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size