Facebook Pixel அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்! | Dinamani Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!

Dinamani Chennai

|

September 05, 2025

உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.

- இளங்கோ கட்டிமுத்து

ஆண்டுதோறும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5), அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவர் தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். இவர் அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும், தன்பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார்.

தன் முதல் பணியை சென்னை மாநில கல்லூரியில் தொடங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து, நீண்ட காலமாக தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 'சர்' பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு, இவருக்கு 1954-இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய போது, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை, ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாட அனுமதி கோரி அவருடைய மாணவர்கள் அவரை அணுகியபோது, 'எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனது பெருமைக்குரிய பாக்கியமாக இருக்கும்' என்ற கோரிக்கையைப் பரிந்துரை செய்தார். அதன்படி, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ளவர் குரு. நமக்கு இந்த உலகைக் கற்பிக்கும் ஆசான். நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். பெற்றோர் சொல்வதைவிட ஆசிரியர் சொல்வதைத்தான் மாணவர்கள் கேட்பார்கள். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு!

'ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிர்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியர் ஸ்டார்மர் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்

எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமமுகவிலிருந்து திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜிநாமா

அமமுக திருச்சி மாவட்டச் செயலாளர் ப.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

குடிநீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு

முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

தேர்தல் வெற்றியும் தோல்வியும்...?

சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவ தும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது.

time to read

2 mins

May 13, 2026

Dinamani Chennai

போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்

அரசாணை வெளியீடு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

மாநகராட்சி சமுதாய கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size