Try GOLD - Free
அதிசயங்கள் நிறைந்த பூரி ஜெகநாதர் ஆலயம்!!
Penmani
|August 2025
எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே பரம் பொருள் என்று வேதங்கள் கூறுகின்றன.
மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்துத் தன் பக்தர்களைக் காப்பாற்றுகிறார். அதில் அனைவராலும் கொண்டாடப்படுவது கிருஷ்ண அவதாரம். வேதத்தாலும் அளவிட முடியாத குணங்கள் நிரம்பியவன் பெருமான். தங்கள் பக்தியால் அவனின் அருளை உணர்ந்து, உலகின் பல இடங்களில் அவனைக் கொண்டாடி வருகிறார்கள்.
அவனின் அருள் எல்லா இடங்களிலும் மகா வீர்யத்துடன் பரவி இருக்கிறது என்றாலும் சில இடங்களில் எல்லையற்ற அதிசயங்கள் நிறைந்தும் இருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் பூரி ஜெகநாதர் ஆலயம். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக ஜெகநாதர் கருதப்படுகிறார். பத்ரிநாத், ராமேஸ்வரம், பண்டரிபுரம், இவற்றுடன் பூரியும் பக்தர்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. ஒடிசாவின் பூரி நகரில் அமைந்துள்ள இக்கோயில் இந்தியாவின் கிழக்குக்கடற்கரையில் அமைந்துள்ள முக்கியமான வைணவத் தலம்.
ஸ்ரீகிருஷ்ணரின் வடிவமே ஜெகநாதர். இங்கு அவர் தன் அண்ணன் பலராமன், சுபத்ரா ஆகியோருடனும் காட்சி தருகிறார். மகாலஷ்மியுடன் சண்டை ஏற்பட்ட பிறகு, அவரிடம் மன்னிப்பு கேட்க, விஷ்ணு பூமிக்கு ஜெகனாதராக வந்ததாகக் கூறப்படுகிறது. ஜாதி வேறுபாடுகளை இவர் களைந்து எறிந்தார். இவரின் ரத யாத்திரையின் போது பல ஜாதியினரும் வடம் பிடித்து இழுக்கிறார்கள்.
தூய இதயத்துடனும், பக்தியுடனும் இவரை வழிபட்டால், இறைவன் உடனே அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார் என்கிறார்கள். அறிவியலுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் நிறைந்த கோவிலாக இக்கோயில் விளங்குகிறது.
கட்டிட அமைப்பு.: ஜெகநாதர் பிரபஞ்சக் கடவுளென்று வணங்கப்படுகிறார். இக்கோயில் கி.பி 12-ம் நூற்றாண்டில் கங்கை வம்சத்தை நிறுவிய அனந்த வர்மன் சோடகங்க தேவரால் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சிலை வேம்பு என்ற தாது பிரம்மத்தால் செய்யப்பட்டது.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதே மரத்தினால் மீண்டும் ஒருமுறை மூலவர் சிலை மறு உருவாக்கம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இங்கு மூலவராக ஸ்ரீகிருஷ்ணர் காட்சி அளிக்கிறார்.
This story is from the August 2025 edition of Penmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Penmani

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size