Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Dinamani Tiruvarur

|

June 25, 2025

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் இருவர், மாறுபட்ட தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

மதுரை, ஜூன் 24:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுக்கக் கூடாது என இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபடவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதேபோல, சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு ஆடு, கோழி யுடன் செல்லக் கூடாது எனக் காவல் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கண்ணன், முத்துகுமார் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

இதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இது பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன.

இந்தக் கோயிலில் எந்தவிதமான உயிர் பலியும் கொடுக்கக் கூடாது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு, கோழிகளைப் பலி யிட்டு, பொது விருந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்தது.

திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், அவற்றை சமைத்துப் பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இதேபோல, திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

October 28, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திங்கள்கிழமை மாலை கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

time to read

1 mins

October 28, 2025

Dinamani Tiruvarur

அன்புள்ள ஆசிரியருக்கு...

மேடைகளில் பேசத் தொடங்கும் காலத்தில் தயக்கம் ஏற்படுவது இயல்புதான் (‘தயக்கம் வேண்டாம்...’- துணைக் கட்டுரை- பெ. சுப்ரமணியன், 20.10.25). பள்ளிகளில் பல வகைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் தயக்கம் தவிர்க்கப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், வெளிப்படையான விவாதம், மனம் திறந்த கலந்துரையாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல சிந்தனைக்குப் பழக்கப்படுவதுமே மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் கருத்தொற்றுமைக்கும் மன இருள் அகன்று அன்பு ஒளிவீசவும் வழிகோலும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்பதை மனதில் கொண்டால் ஆலம் விதைக்கு சுவர் வழிவிடாது.

time to read

1 min

October 28, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

நாளை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் கோரிக்கை தொடர்பாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

time to read

1 min

October 28, 2025

Dinamani Tiruvarur

30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.

time to read

1 min

October 28, 2025

Dinamani Tiruvarur

ஐஓசி நிகர லாபம் பன்மடங்கு உயர்வு

அதிகரித்த சுத்திகரிப்பு லாப விகிதங்கள் மற்றும் செயல் திறன் காரணமாக, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) செப்டம்பர் காலாண்டில் பன்மடங்கு நிகர லாப உயர்வைப் பதிவு செய்தது.

time to read

1 min

October 28, 2025

Dinamani Tiruvarur

தமிழில் மட்டுமே பேசுவோம்!

மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.

time to read

3 mins

October 28, 2025

Dinamani Tiruvarur

'எதிர்காலத்துக்கு தயாராகு' திட்டம்: மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

அரசுப் பள்ளி மாணவர்கள் கற்றல் அடைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 'எதிர்காலத்துக்குத் தயாராகு' (ஃபியூச்சர் ரெடி) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

time to read

1 min

October 28, 2025

Dinamani Tiruvarur

நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்

தமிழகம், புதுவை உள்பட 12 மாநிலங்களில் தொடக்கம்

time to read

1 mins

October 28, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பலலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

time to read

1 mins

October 27, 2025

Translate

Share

-
+

Change font size