Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

முன்னெடுக்கப்படும் 'முருகன்' அரசியல்!

Dinamani Tiruvarur

|

June 21, 2025

தமிழ்க் கடவுள் முருகனின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது.

சென்னை, ஜூன் 20:

தமிழகத்தில் முருக வழிபாடு குறிப்பாக கொங்கு, தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும். அங்கெல்லாம் முருக பக்தர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் முருகப்பெருமான் குறித்து தனது பேச்சில் அதிகமாக உரையாற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

அவர் திருப்புகழ் குறித்தும், திருமுருகாற்றுப்படை குறித்தும் அறுபடை முருகன் குறித்தும் ஆற்றும் ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஆனால், 'தமிழ்க் கடவுள்' முருகனை அவர் ஒரு போதும் அரசியலுக்காகப் பயன்படுத்தவில்லை.

ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது, திருச்செந்தூர் கோயில் வேல் களவு போனது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1982-இல் நீதி கேட்டு நெடும் பயணம் எனும் பெயரில் அதை மையப்படுத்தி அரசியல் செய்தார். ஆனால் 'முருகனும் வேலும்' அவருக்கு அரசியல் ரீதியாகக் கைகொடுக்கவில்லை.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் 'முருகன் முப்பாடடன்'என்ற முழக்கத்துடன் அரசியலில் களம் இறங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த பிரசாரம் 2016-இல் 1.1 சதவீதமாக இருந்த நாதக வாக்கு வங்கி 3.87 சதவீதமாக மும்மடங்கு பெற உதவியதாக கருதப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvarur

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvarur

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: அரசு வழிமொழியத் தயார்

பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு வழிமொழி யத் தயாராக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvarur

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruvarur

கர்நாடக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruvarur

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Translate

Share

-
+

Change font size