Try GOLD - Free
பிரதமர் நரேந்திர மோடி - சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
Dinamani Tiruppur
|August 19, 2025
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தில்லியில் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
-
புது தில்லி, ஆக. 18:
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி தலைமையிலில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பு தலைவர்களைச் சந்திக்கும் நோக்கில் சி.பி.ராதாகிருஷ்ணன் தில்லிக்கு திங்கள்கிழமை வந்தார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்தேன். பொதுச் சேவையில் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளில் நீண்ட அனுபவம் கொண்ட அவரின் பணி தேசத்துக்கு மேலும் சிறந்த பங்களிப்பைச் செலுத்தும். அவரது தேசப் பணி அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடரும்' என்று கூறியுள்ளார்.
This story is from the August 19, 2025 edition of Dinamani Tiruppur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruppur
Dinamani Tiruppur
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: ரஷிய சர்வரில் இருந்து வந்த மின்னஞ்சல்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சாலை விபத்து: சமையலர் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலர் உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 mins
September 01, 2025
Dinamani Tiruppur
15.வேலம்பாளையத்தில் செப்டம்பர் 3-இல் மின்தடை
15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min
September 01, 2025
Dinamani Tiruppur
வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size