Try GOLD - Free
மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்
Dinamani Ramanathapuram & Sivagangai
|December 13, 2025
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொகை உயர்த்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது:
ஜாதி, மத, இன, மொழி, பாலினப் பாகுபாடு இல்லாமல், எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் லட்சியம். அதனால்தான், 2021 மே 7-ஆம் நாள், முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் ஏராளமான முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கினேன். இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருக்கிறது.
வெற்றித் திட்டம்: இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,000 ரூபாய் - உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை. ஒரு திட்டத்தை பொதுமக்கள் எந்த அளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் வாழ்க்கைத் தரத்தை, சமூக நிலையை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் அந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது.
தமிழகத்தில் மகளிர் மாதம் 1,000 ரூபாயை பெறுகிறார்கள்; விடியல் பயணத்தில் மாதந்தோறும் கிட்டத்தட்ட 1,000 ரூபாய் மீதமாகிறது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் தங்களின் பிள்ளைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் கிடைப்பதால் ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது.
திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களை முதலீடாக மாற்றி, தங்களின் பொருளாதார வலிமையை தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்த்திக் கொள்கிறார்கள். இதைத்தான் இந்தத் திட்டத்தின் வெற்றியாகப் பார்க்கிறேன்.
This story is from the December 13, 2025 edition of Dinamani Ramanathapuram & Sivagangai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
1 min
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
2 mins
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
2 mins
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Ramanathapuram & Sivagangai
'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கை தீர்ப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 mins
January 08, 2026
Listen
Translate
Change font size
