Try GOLD - Free
அன்பின் வழியது உயிர்நிலை
Dinamani Pudukkottai
|October 30, 2025
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
வெறுப்பு சார்ந்த எண்ணங்கள் மனதின் ஆழத்திலே நீறுபூத்த நெருப்பைப் போல் வேரூன்றி வீற்றிருக்கும். இதனால், பெரும் கேடுகள் விளையக்கூடும். வெறுப்பு உள்ள இடத்தில் அன்பு இருப்பதில்லை. ஒருவரிடம் ஒருவர் எத்தகைய பரிவும் இன்றி உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து போர் நடைபெறுகிறது. அதன் விளைவுகளையும் உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது. ஆங்காங்கே எல்லைத் தகராறுகள் வெடிக்கின்றன. உலகில் அமைதி நிலவ வேண்டும் எனில், மனிதனின் மனத்திலே அன்பு சுரக்க வேண்டும்.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்னும் உணர்வானது இயல்பாகவே அமைந்துள்ளது. அன்பு இல்லையெனில் வாழ்க்கைத் தொடர் என்பது அற்று விடும். அன்புதான் உடல் நலம், மனநலன் போன்றவற்றின் மேன்மையான நிலைக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அன்பிற்குப் பரந்த, விரிந்த ஆற்றல் உள்ளது. அன்பு அலைகளை இயற்கையிடம் பாயும்படிச் செய்தால், அதன் பயனாக உலகெங்கிலும் நல்ல விளைவுகளைத் தோற்றுவிக்க முடியும்.
கன்னடக் கவிஞர் குவெம்பு, 'செல்வம் உள்ளது, கல்வி உள்ளது விஞ்ஞானமும் கையில் உள்ளது சினம் மிக்க போர்க்களத்தின் செந்தழல் மருள் கொண்டு திரண்டு எழுந்த நிலை' என்று தன் கவிதையில் தற்காலச் சூழலை உள்ளவாறு வடித்துள்ளார்.
This story is from the October 30, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Dinamani Pudukkottai
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Pudukkottai
நிதி எழுப்பும் கேள்வி!
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
2 mins
October 31, 2025
Dinamani Pudukkottai
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Pudukkottai
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Dinamani Pudukkottai
அன்பின் வழியது உயிர்நிலை
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
2 mins
October 30, 2025
Dinamani Pudukkottai
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
2 mins
October 30, 2025
Listen
Translate
Change font size

