Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

Dinamani Pudukkottai

|

April 18, 2025

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

அழுத்தங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், உண்மையை ஒலிக்க யாருக்கும் அஞ்சாத சிலரின் குரல்களை அடக்க முடியாது. அந்த மிடுக்கான மனிதர்களில் முக்கியமானவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமத்தின் நிறுவனர்-தலைவரான ராம்நாத் கோயங்கா.

ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது அனைத்துப் பத்திரிகைகளையும் காலவரையின்றி மூடி சுதந்திரப் போரில் பங்கெடுத்த ராம்நாத் கோயங்கா, அவசரநிலையின்போது அதிகார மையம் கட்டவிழ்த்த சவால்களை மீறி தன்னுடைய பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்தி கருத்துரிமையை நிலைநிறுத்தி பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலராகத் திகழ்ந்தார்.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணம், தற்போதைய பிகார் மாநிலத்தின் வட பகுதியான தர்பங்காவில் 1904-இல் பிறந்த ராம்நாத் கோயங்கா, வணிகம் செய்வதற்காக சென்னைக்கு வந்தார். ராம்நாத் கோயங்காவுக்கு சென்னை வெறும் வியாபார இடமாக மட்டுமல்லாமல் சமுதாயம், அரசியல் புரிதலுக்கான ஒரு வளமான மேடையாகவும் மாறியது.

நகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் கலந்து பழகி, சமுதாயத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் மக்களின் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார்.

22 வயது இளைஞராக ராம்நாத் கோயங்காவின் சமுதாயநல ஆவலை உற்றுநோக்கிய சென்னை நிர்வாகம், 1926-இல் தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினராக அவரை நியமித்தது. அரசின் நியமனப் பதவியாக இருந்தாலும், மக்களின் நலனுக்காக அதை முழுமையாகப் பயன்படுத்தி, அரசின் தவறுகளையும் குறைகளையும் உரைக்கத் தயங்காத அவரது நேர்மை பலரை வெகுவாகக் கவர்ந்தது.

சுதந்திர வேட்கை வேரூன்றியிருந்த அவர், தேசபற்றுக் கொண்ட பத்திரிகைகள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வராஜ்யா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்தார். அந்த வகையில்தான், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.

MORE STORIES FROM Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

‘ஏக்கறவு’ என்னும் ஒரு சொல்

வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது 'ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.

time to read

2 mins

September 28, 2025

Dinamani Pudukkottai

மீண்டும் பவுன் ரூ.85 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.85,120-க்கு விற்பனையானது.

time to read

1 min

September 28, 2025

Dinamani Pudukkottai

அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. 'உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது. இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:

time to read

3 mins

September 28, 2025

Dinamani Pudukkottai

70 வயதில் பிளஸ் 2 பாஸ்!

சென்னை சௌகார்பேட்டையில் வசிக்கும் நிர்மல்குமாருக்கு பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர். இவரது பெற்றோர் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சமயத்தில் இவர் சென்னையில் பிறந்தார். இப்போது எழுபது வயதாகும் அவருக்கு, இரண்டு மகன்கள், ஒரு பேரக் குழந்தை இருக்கிறார்கள்.

time to read

1 mins

September 28, 2025

Dinamani Pudukkottai

பல்லி: அச்சம் தவிர்!

உயிரினங்களில் பல்லிகள் என்றாலே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். ஆனால் பல்லிகள் மனித குலத்துக்கு நன்மையைச் செய்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கின்றன. கொசுக்கள், கரையான்கள், ஈக்கள், பூச்சிகளை உணவாக ஏற்று, பல்லிகள் உயிர்வாழ்கின்றன' என்கிறார் 'அழிந்து வரும் பல்லியினங்கள்' குறித்து முப்பது ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் வன உயிரின ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி.

time to read

1 mins

September 28, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

time to read

1 min

September 28, 2025

Dinamani Pudukkottai

பார்வையற்றவரின் இசை உலகம்!

மிருதங்கம், கொன்னக்கோல் போன்றவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர், முற்றிலும் பார்வையிழந்தவர்; நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சபாக்களில் 4 இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்; 1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் மிருதங்க விரிவுரையாளராகப் பணி புரிந்து வருபவர், 2018-ஆம் ஆண்டு முதல் மதுரை சங்கீத சபாவில் கௌரவ ஆலோசகர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் வலங்கைமான் க.தியாகராஜன். இவரிடம் பேசியதிலிருந்து:

time to read

1 min

September 28, 2025

Dinamani Pudukkottai

திமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கானதே:விஜய்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களித்தது போலவே ஆகும் என்றார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் மக்களிடையே பேசியது:

time to read

1 mins

September 28, 2025

Dinamani Pudukkottai

தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம்!

'தடம்', 'யானை', 'சினம்' என வரிசையாகப் பணிபுரிந்த அழகு ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு எக்கச்சக்க பெயர் சேர்ந்திருக்கிறது. 'தில்', 'தூள்', 'கில்லி', தெலுங்கில் வந்த 'பங்காரம்' என அவர் வேலை பார்த்த அத்தனை படங்களும் ஹிட்.

time to read

2 mins

September 28, 2025

Dinamani Pudukkottai

விஜய் பிரசாரம்: நெரிசலுக்கு காரணம் என்ன?

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

time to read

1 mins

September 28, 2025

Translate

Share

-
+

Change font size