Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

Dinamani Pudukkottai

|

April 18, 2025

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

அழுத்தங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், உண்மையை ஒலிக்க யாருக்கும் அஞ்சாத சிலரின் குரல்களை அடக்க முடியாது. அந்த மிடுக்கான மனிதர்களில் முக்கியமானவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுமத்தின் நிறுவனர்-தலைவரான ராம்நாத் கோயங்கா.

ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது அனைத்துப் பத்திரிகைகளையும் காலவரையின்றி மூடி சுதந்திரப் போரில் பங்கெடுத்த ராம்நாத் கோயங்கா, அவசரநிலையின்போது அதிகார மையம் கட்டவிழ்த்த சவால்களை மீறி தன்னுடைய பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்தி கருத்துரிமையை நிலைநிறுத்தி பத்திரிகைச் சுதந்திரத்தின் காவலராகத் திகழ்ந்தார்.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணம், தற்போதைய பிகார் மாநிலத்தின் வட பகுதியான தர்பங்காவில் 1904-இல் பிறந்த ராம்நாத் கோயங்கா, வணிகம் செய்வதற்காக சென்னைக்கு வந்தார். ராம்நாத் கோயங்காவுக்கு சென்னை வெறும் வியாபார இடமாக மட்டுமல்லாமல் சமுதாயம், அரசியல் புரிதலுக்கான ஒரு வளமான மேடையாகவும் மாறியது.

நகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் கலந்து பழகி, சமுதாயத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் மக்களின் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார்.

22 வயது இளைஞராக ராம்நாத் கோயங்காவின் சமுதாயநல ஆவலை உற்றுநோக்கிய சென்னை நிர்வாகம், 1926-இல் தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினராக அவரை நியமித்தது. அரசின் நியமனப் பதவியாக இருந்தாலும், மக்களின் நலனுக்காக அதை முழுமையாகப் பயன்படுத்தி, அரசின் தவறுகளையும் குறைகளையும் உரைக்கத் தயங்காத அவரது நேர்மை பலரை வெகுவாகக் கவர்ந்தது.

சுதந்திர வேட்கை வேரூன்றியிருந்த அவர், தேசபற்றுக் கொண்ட பத்திரிகைகள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வராஜ்யா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்தார். அந்த வகையில்தான், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.

FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

யு19 கிரிக்கெட்: இந்தியா அபாரம்

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு19) ஒருநாள் கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 167 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

September 27, 2025

Dinamani Pudukkottai

சல்மான் ருஷ்டி நாவலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய 'தி சாட்டானிக் வெர்சஸ்' நாவலுக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

time to read

1 min

September 27, 2025

Dinamani Pudukkottai

2-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், டி மினார்

பெய்ஜிங், செப்.26: சீனா ஓபன் டென் னிஸில், முன்னணி போட்டியா ளர்களான ஜெர்மனியின் அலெக் ஸாண்டர் ஸ்வெரெவ், ஆஸ்திரேலி யாவின் அலெக்ஸ் டி மினார் ஆகி யோர் 2-ஆவது சுற்றுக்கு வெள்ளிக் கிழமை முன்னேறினர்.

time to read

1 min

September 27, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-ஆவது பிறந்ததினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

time to read

1 min

September 27, 2025

Dinamani Pudukkottai

கழிவுநீர் மேலாண்மைச் சவால்கள்!

சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை, மனிதக் கழிவுகளால் 1858-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் தேம்ஸ் நதி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட பெரும் துர்நாற்றத்தால் (கிரேட் சிடிங்க்) லண்டன் நகரம் திணறியது.

time to read

2 mins

September 27, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 mins

September 26, 2025

Dinamani Pudukkottai

தபங் டெல்லிக்கு 7-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத் தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

September 26, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்

வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி. இந்நகரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்.

time to read

2 mins

September 26, 2025

Dinamani Pudukkottai

ஆராய்ச்சியும் சமூக முன்னேற்றமும்...

கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்காக மட்டுமானதல்ல. கல்வியின் உண்மையான நோக்கம் மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தி, புதிய அறிவைத் தேடித் தருவதும், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிகளைக் கண்டறிவதுமே ஆகும். இதற்கான மிகச் சிறந்த கருவி ஆராய்ச்சி.

time to read

2 mins

September 26, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

உயர் கல்வியில் உன்னதமே இலக்கு

'உயர் கல்வியில் தமிழகம் உன்னத நிலையை அடைவதே நமது இலக்கு; கல்வியில் சிறந்த தமிழகத்தை கல்வியில் உயர்ந்த தமிழகமாக மாற்றுவோம்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

time to read

2 mins

September 26, 2025

Translate

Share

-
+

Change font size