Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!

Dinamani Nagapattinam

|

September 15, 2025

'முதலில் நாடு, கட்சி பிறகு' என்பதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. அது மட்டுமல்ல, பண்டித நேருவின் மறைவுக்கு திமுகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறந்தன. ஒரு வாரம் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசியல் நாகரிகத்துக்கு இது ஓர் உதாரணம்.

- கோ.விசுவநாதன்

மக்களுக்காக அரசியல், அரசியலுக்காக மக்கள் அல்ல என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா. 'அடைந்தால் திராவிட நாடு இல்லையெனில் சுடுகாடு' எனச் சொல்லித்தான் திமுகவை அவர் வளர்த்தார்.

திமுகவின் வளர்ச்சியில் மிரண்டு போன காங்கிரஸ் அரசு, பிரிவினை பேசும் கட்சிகளைத் தடை செய்ய சட்டம் இயற்றியது. பிரிவினைவாதிகளைக் கைது செய்யவும் திட்டமிட்டது. இந்தச் சட்டம் திமுகவை தடை செய்ய என்பதை உணர்ந்த அண்ணா, மக்களுக்காகத்தான் அரசியல் என்ற உயர்ந்த கொள்கை பிடிப்பாளரான அவர், 'திராவிட நாடு உருவாவதற்கான காலம் கனியும் வரை எமது தரத்தை பலமுள்ளதாக உருவாக்குவேன்' என்று சொன்னார். அதனால்தான், சீனப் படையெடுப்பின்போது திராவிட நாடு கொள்கையை தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் போதும் எதிர்க்கும் போதும் கூட அவரது அரசியல் நாகரிகம் வெளிப்பட்டது. 'காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்கு முன்னரும் செய்த நல்லவை எதையும் நான் மறுக்கவும் இல்லை; எதிர்க்கவுமில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸையும் அதன் செயல்பாடுகளையும் தான் எதிர்க்கிறேன்' என்று சொன்னார் அண்ணா.

ஆகஸ்ட் 15-ஆம் தேதியை துக்க நாளாக பெரியார் அறிவித்தபோது அண்ணா அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 'இரண்டு நூற்றாண்டுகளாக இந்தத் துணைக்கண்டத்தின் மீது இருந்து வந்த பழிச்சொல்லை, இழிவை நீக்கும் அந்த நாள் திராவிடருக்கும் திருநாள், துக்க நாள் ஆகாது' என்று ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு

நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 20, 2025

Dinamani Nagapattinam

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 20, 2025

Dinamani Nagapattinam

மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது

தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

time to read

1 min

December 20, 2025

Dinamani Nagapattinam

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.

time to read

2 mins

December 20, 2025

Dinamani Nagapattinam

1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி

மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Nagapattinam

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Nagapattinam

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Nagapattinam

பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது

திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்

நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது 'பூலோக வைகுண்டம்', 'பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.

time to read

2 mins

December 19, 2025

Dinamani Nagapattinam

விஜய் விவகாரம்: பிகார் முதல்வர் நிதீஷுக்கு ஆதரவான மத்திய அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

பிகாரில் புதிதாக பணிக்குச் சேர்ந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய விவகாரத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

December 19, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back