Versuchen GOLD - Frei
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
Dinamani Nagapattinam
|September 15, 2025
'முதலில் நாடு, கட்சி பிறகு' என்பதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. அது மட்டுமல்ல, பண்டித நேருவின் மறைவுக்கு திமுகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறந்தன. ஒரு வாரம் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசியல் நாகரிகத்துக்கு இது ஓர் உதாரணம்.
மக்களுக்காக அரசியல், அரசியலுக்காக மக்கள் அல்ல என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா. 'அடைந்தால் திராவிட நாடு இல்லையெனில் சுடுகாடு' எனச் சொல்லித்தான் திமுகவை அவர் வளர்த்தார்.
திமுகவின் வளர்ச்சியில் மிரண்டு போன காங்கிரஸ் அரசு, பிரிவினை பேசும் கட்சிகளைத் தடை செய்ய சட்டம் இயற்றியது. பிரிவினைவாதிகளைக் கைது செய்யவும் திட்டமிட்டது. இந்தச் சட்டம் திமுகவை தடை செய்ய என்பதை உணர்ந்த அண்ணா, மக்களுக்காகத்தான் அரசியல் என்ற உயர்ந்த கொள்கை பிடிப்பாளரான அவர், 'திராவிட நாடு உருவாவதற்கான காலம் கனியும் வரை எமது தரத்தை பலமுள்ளதாக உருவாக்குவேன்' என்று சொன்னார். அதனால்தான், சீனப் படையெடுப்பின்போது திராவிட நாடு கொள்கையை தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் போதும் எதிர்க்கும் போதும் கூட அவரது அரசியல் நாகரிகம் வெளிப்பட்டது. 'காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்கு முன்னரும் செய்த நல்லவை எதையும் நான் மறுக்கவும் இல்லை; எதிர்க்கவுமில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸையும் அதன் செயல்பாடுகளையும் தான் எதிர்க்கிறேன்' என்று சொன்னார் அண்ணா.
ஆகஸ்ட் 15-ஆம் தேதியை துக்க நாளாக பெரியார் அறிவித்தபோது அண்ணா அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 'இரண்டு நூற்றாண்டுகளாக இந்தத் துணைக்கண்டத்தின் மீது இருந்து வந்த பழிச்சொல்லை, இழிவை நீக்கும் அந்த நாள் திராவிடருக்கும் திருநாள், துக்க நாள் ஆகாது' என்று ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
Diese Geschichte stammt aus der September 15, 2025-Ausgabe von Dinamani Nagapattinam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.
1 min
October 23, 2025
Dinamani Nagapattinam
இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.
1 min
October 23, 2025
Dinamani Nagapattinam
'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்
சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
1 min
October 23, 2025
Dinamani Nagapattinam
புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு
புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
1 mins
October 23, 2025

Dinamani Nagapattinam
தென்னாப்பிரிக்காவை மீட்ட முத்துசாமி, ரபாடா
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்து புதன்கிழமை ஆட்டமிழந்தது.
1 min
October 23, 2025

Dinamani Nagapattinam
நிகழாண்டில் 7-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
மேட்டூர் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,500 கன அடியாக உள்ளதால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீர்ப்போக்கிகள் வழியாக 22,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
1 min
October 22, 2025

Dinamani Nagapattinam
புதிய தலைமை மலர்கிறது!
காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.
3 mins
October 22, 2025

Dinamani Nagapattinam
சக்காரியை சாய்த்தார் லெய்லா
ஜப்பானில் நடைபெறும் டோரே பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ், அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
October 22, 2025

Dinamani Nagapattinam
ஒருநாள் கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
October 22, 2025
Dinamani Nagapattinam
இந்திய ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன்
தென்னாப்பிரிக்க'ஏ' அணிக்கு எதிரான சிவப்புப் பந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய 'ஏ' அணியின் கேப்டனாக, விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பந்த் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
October 22, 2025
Translate
Change font size