Try GOLD - Free
அன்பு மன்னிப்புக் கேட்கும்!
Dinamani Cuddalore
|June 05, 2025
அன்பு மன்னிப்புக் கேட்காது என்பது சரியல்ல; அன்பே மன்னிப்புக் கேட்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு வரும்போது யார் பக்கம் நியாயம் என வாதிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்டால் அந்த இல்லறம் தழைக்கிறது. வீட்டுக்குப் பொருந்துவது நாட்டுக்கும் பொருந்தும்.
டிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி என்று சொன்னது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கன்னட மொழி பேசும் பிரதேசங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்கெனவே சொன்னவர்கள் தமிழில் பலர் உண்டு. அப்போதெல்லாம் இந்தக் கருத்து சர்ச்சையானதில்லை. காரணம், சொன்னவர்கள் அதிகம்பேர் அறியாத தமிழ் அறிஞர்கள். எல்லோராலும் அறியப்பட்ட திரைப் பிரபலங்கள் அல்லர்.
கன்னட மொழி அன்பர்கள், மலையாள இளைஞரின் கண்ணோட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியதைப் புரிந்துகொண்டால், எதிர்க்காமல் மகிழ்ச்சிகொள்ள வாய்ப்பிருக்கிறது.
மலையாள இளைஞர் தமிழில் நான்கு 'க' எழுத்துகள் இல்லையே என்றாரே, அது தமிழின் குறை யல்ல; தமிழின் தன்மை; அவ்வளவே. ஏனெனில், இடத்துக்குத் தகுந்தவாறு ஒரே எழுத்தான 'க' தமிழில் தன் உச்சரிப்பை மாற்றிக் கொள்கிறது.
ப.க. பொன்னுசாமி எழுதிய படுகளம் என்ற புதினம் கொங்குத் தமிழின் அத்தனை நயங்களை யும் பதிவு செய்துள்ளது. ஆனால், அந்த வழக்குகள் அனைத்தையும் இன்று கொங்கு நாட்டில் கேட்க முடியுமா என்பது சந்தேகமே. கொங்கு வட்டார வழக்கும்
'கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று தாம் எழுதிய மனோன்மணீயம் கவிதை நாடக நூலில் சொல்கிறார் சுந்தரம் பிள்ளை. அவர் கருத்தைத்தான் நடிகர் கமல்ஹாசனும் கூறியுள்ளார்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் தென்மொழிகள் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நா. பார்த்தசாரதியும் நானும் கலந்துகொண்டோம். அங்கே ஒரு தமிழ்ப் பண்டிதர் கட்டுரை வாசித்தார். தமிழ் தாய் மொழி என்றும் அதிலிருந்து பிறந்த சேய் மொழிகள்தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு மலையாள இளைஞர் 'நீங்கள் கவிதை வாசிக்கிறீர்களா, கட்டுரை வாசிக்கிறீர்களா?' என்று கேட்டார். 'ஏன் கட்டுரை தான் வாசிக்கிறேன்' என்றார் தமிழ்ப் பண்டிதர். 'அப்படியானால் தாய்சேய் போன்ற கவிதைத் தன்மைகளை நீக்கிவிட்டுச் சொல்லுங்கள். தமிழிலிருந்து தோன்றியவை கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை என்பதுதானே உங்கள் கருத்து' என வினவினார் அவர். ஆம் என்றார் இவர். உடன் மலையாள இளைஞர் தம் கண்ணோட்டத்தை விளக்கினார்.
This story is from the June 05, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு
தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Cuddalore
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani Cuddalore
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Cuddalore
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Dinamani Cuddalore
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Cuddalore
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Cuddalore
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Cuddalore
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Cuddalore
எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்
எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
May 13, 2026
Dinamani Cuddalore
717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் உத்தரவு
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Translate
Change font size
