Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

செயற்கை நுண்ணறிவு- இருமுனைக் கத்தி!

Dinamani Chennai

|

October 30, 2025

மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது.

- ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

ஆனால், இப்போது, மனிதனே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆனால், அது லாபம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக அமையும்.

மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல், புதிய மருந்துகள் உருவாக்கம், துல்லியமான மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு என எல்லாத் துறைகளிலும் இதன் தடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரு எக்ஸ் ரே அல்லது எம்.ஆர்.ஐ. படத்தில் மனிதக் கண்களால் காண முடியாத நுண்ணிய மாற்றங்களை ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறை (அல்காரிதம்) கண்டறிய முடியும்.

இந்த முறையில் மனித தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, விரைவான தீர்வுகளுக்கும் வழிவகுக்க முடியும். இதனால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே துல்லியமாக அடையாளம் காண முடியும்.

நோயாளியின் மரபணு, வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்றவற்றை சில விநாடிகளில் அலசி ஆராய்ந்து, அவருக்கென தனித்துவமான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதுவே "தனிப்பட்ட மருத்துவம்' என்ற புதிய பரிமாணத்தை மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைத் துறையில் உருவாக்கியுள்ளது.

மருந்து ஆய்வகங்களிலும் இதுவரை கண்டிராத புரட்சியை இது உருவாக்கத் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மூலக்கூறுகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்து சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் திறன் இதற்குண்டு; இதனால், மருந்துக் கண்டுபிடிப்பு ஆண்டுகள் அல்ல, மாதங்களில் முடிகிற நிலை உருவாகி வருவது கண்கூடு. எனவே, குறைந்த விலையில் சிறந்த மருந்துகள் உருவாகும் வாய்ப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

இன்றைய அளவில் மருத்துவமனைகளின் நிர்வாகச் சுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரடியாகச் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. வயது முதிர்ந்தோரின் மக்கள்தொகை தொடந்து அதிகரித்துவரும் சூழலில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பெரும் உதவியாக இருக்கும்.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா மறைவு

தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்

time to read

2 mins

November 25, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அதிரடி நாயகன் தர்மேந்திரா!

இந்திய சினிமாவின் இரும்பு மனிதன், வசீகரத்தின் மறுஉருவம் என பல பட்டங்களுடன் 60 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளித்திரையை ஆக்கிரமித்தவர் நடிகர் தர்மேந்திரா (89). பஞ்சாபில் சாதாரண கிராமத்தில் பிறந்து, கனவுகளுடன் மும்பை வந்து, ஹிந்தி திரையுலகின் 'ஹீ-மேனாக' உயர்ந்தது இவரது வெற்றிச் சரித்திரம். இந்தப் பெருங்கலைஞரின் மறைவுச் செய்தி, திரையுலகினரையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

time to read

1 mins

November 25, 2025

Dinamani Chennai

211 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியாகவும் இருந்ததைக் கண்டறிந்துள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

time to read

1 min

November 25, 2025

Dinamani Chennai

உறவு முறிந்தால் பாலியல் வழக்கா?: குற்றவியல் நீதியின் தவறான பயன்பாடு

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

time to read

1 min

November 25, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நெல் கொள்முதல்: திமுக அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிப்பு

நெல் கொள்முதல் பிரச்னையில் திமுக அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

time to read

1 mins

November 25, 2025

Dinamani Chennai

இந்திய மகளிர் கபடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

November 25, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவிடம் தடுமாறும் இந்தியா

201 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

time to read

1 mins

November 25, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு

புது தில்லி, நவ.24: உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் திங்கள்கிழமை பதவியேற்றார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, 'கடவுளின் பெயரில்' என ஹிந்தியில் அவர் உறுதிமொழி ஏற்றார்.

time to read

2 mins

November 25, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

வரும் கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்

அமைச்சர் அன்பில் மகேஸ்

time to read

1 mins

November 25, 2025

Dinamani Chennai

இந்திய நெருடா தமிழன்பன் !

ஈரோடு தமிழன்பன் காலமானார் என்ற செய்தி தமிழ் உள்ளங்களில் இடியாய் இறங்கியுள்ளது ...

time to read

2 mins

November 25, 2025

Listen

Translate

Share

-
+

Change font size