Prøve GULL - Gratis
செயற்கை நுண்ணறிவு- இருமுனைக் கத்தி!
Dinamani Chennai
|October 30, 2025
மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது.
ஆனால், இப்போது, மனிதனே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஆனால், அது லாபம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக அமையும்.
மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல், புதிய மருந்துகள் உருவாக்கம், துல்லியமான மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு என எல்லாத் துறைகளிலும் இதன் தடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஒரு எக்ஸ் ரே அல்லது எம்.ஆர்.ஐ. படத்தில் மனிதக் கண்களால் காண முடியாத நுண்ணிய மாற்றங்களை ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறை (அல்காரிதம்) கண்டறிய முடியும்.
இந்த முறையில் மனித தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, விரைவான தீர்வுகளுக்கும் வழிவகுக்க முடியும். இதனால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே துல்லியமாக அடையாளம் காண முடியும்.
நோயாளியின் மரபணு, வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்றவற்றை சில விநாடிகளில் அலசி ஆராய்ந்து, அவருக்கென தனித்துவமான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதுவே "தனிப்பட்ட மருத்துவம்' என்ற புதிய பரிமாணத்தை மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைத் துறையில் உருவாக்கியுள்ளது.
மருந்து ஆய்வகங்களிலும் இதுவரை கண்டிராத புரட்சியை இது உருவாக்கத் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மூலக்கூறுகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்து சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் திறன் இதற்குண்டு; இதனால், மருந்துக் கண்டுபிடிப்பு ஆண்டுகள் அல்ல, மாதங்களில் முடிகிற நிலை உருவாகி வருவது கண்கூடு. எனவே, குறைந்த விலையில் சிறந்த மருந்துகள் உருவாகும் வாய்ப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.
இன்றைய அளவில் மருத்துவமனைகளின் நிர்வாகச் சுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரடியாகச் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. வயது முதிர்ந்தோரின் மக்கள்தொகை தொடந்து அதிகரித்துவரும் சூழலில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பெரும் உதவியாக இருக்கும்.
Denne historien er fra October 30, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
இன்றைய மோதல் உலகுக்கு ஸ்ரீசத்ய சாய் பாபாவின் போதனைகள் பொருத்தமானவை
குடியரசு துணைத் தலைவர்
1 min
November 24, 2025
Dinamani Chennai
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு
சண்டீகர் மசோதா
1 mins
November 24, 2025
Dinamani Chennai
ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு
ஜி20 மாநாட்டையொட்டி, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச் சியை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
1 min
November 24, 2025
Dinamani Chennai
இலவச சத்திரமாக மாறிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம்...!
போக்குவரத்து வசதிக்காக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம், தற்போது இலவச சத்திரமாக மாறிவிட்டதாகவும், அதனால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
2 mins
November 24, 2025
Dinamani Chennai
என்ஐஏ கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
பேராசிரியர் ஜோசப் தாக்குதல் வழக்கு
1 min
November 24, 2025
Dinamani Chennai
டெல்டா, தென் மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
'சென்யார்' புயல் நவ.26-இல் உருவாக வாய்ப்பு
2 mins
November 24, 2025
Dinamani Chennai
மம்தா குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொள்வதாக மேற்கு வங்க ஆளுநர் உறுதி
வாக்குச் சாவடி அலுவலர்கள் தற்கொலை
1 min
November 24, 2025
Dinamani Chennai
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 78% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 78.74 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது.
1 min
November 24, 2025
Dinamani Chennai
ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: இந்தியாவுக்கு வங்கதேசம் மீண்டும் கடிதம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டுக்கு நாடுகடத்தவேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
1 min
November 24, 2025
Dinamani Chennai
தெற்குலகின் குரலை உயர்த்துவோம்
பிரதமர் மோடி - தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா உறுதி
1 mins
November 24, 2025
Listen
Translate
Change font size

