Facebook Pixel மேலாண்மையின் போக்கும் நோக்கும்! | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மேலாண்மையின் போக்கும் நோக்கும்!

Dinamani Chennai

|

February 26, 2025

அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், காலதாமதம் ஏற்பட்டாலும் முடிந்தவரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர்.

மேலாண்மையின் போக்கும் நோக்கும்!

மக்கள்தொகை பெருகப் பெருக துறைகளும், பிரிவுகளும், விதிமுறைகளும் அளவின்றிப் பெருகின. காலப்போக்கில் விதிமுறைகள் என்ற பெரிய வலைக்குள் அகப்பட்டு ஆட்சியாளர்களும் மக்களும் சிக்கித் தவித்து உழல்வது என்ற சூழலுக்கு உட்பட்டுவிட்டனர்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நாளில் டாக்டர் அம்பேத்கர் கூறிய ஒரு கருத்தை இங்கே நாம் நினைவு கூரலாம். "அரசியலமைப்புச் சட்டம், சட்ட சபை நிர்வாகம், நீதிமன்றம் போன்ற அரசின் அங்கங்களைத்தான் நம்மால் வடிவமைக்க முடியும். மக்கள் தாங்கள் விரும்பும் அரசியலை நடத்த, அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் கட்சிகளை ஒட்டியே இந்த அமைப்புகள் செயற்படும். மக்களும் அரசியல் கட்சிகளும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை நாம் உறுதிசெய்ய முடியவில்லை.

இந்தியர்கள் தங்களுடையசொந்தக் கருத்துகளைவிடத் தம் நாட்டை உயர்வாக எண்ணுவார்களா, அல்லது நாட்டைவிடத் தங்கள் சொந்தக் கருத்துகளையே உயர்வாக மதிப்பார்களா என்பதில் தெளிவில்லை. நாட்டைவிடத் தங்கள் கட்சிக் கொள்கைகளை அதிகமாகப் போற்றினால், நாம் முயன்று பெற்ற விடுதலை மீண்டும் ஒரு முறை இடருக்கு இரையாகும். ஏன் இழந்து விடவும் நேரும். இதனை உணர்ந்து நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கமாகும்''.

நல்ல முறையில் மக்களாட்சி இயங்க சட்டங்களும், விதிகளும் நெறிமுறைகளும் பெருந்துணையாகும். எனினும் மனித வாழ்க்கையை விதிகளுக்குள் சிறைப்படுத்த முடியாது. எனவே விதிவிலக்குகளும் பல நிலைகளில் வேண்டும். ஆனால் விதிவிலக்குகள், விதி செய்ததன் நோக்கத்தையே விழுங்கிவிடக் கூடாது.

"இனி ஒரு விதி செய்வோம்' என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதை எந்த நாளும் காப்போம் என்று பாரதியாரும், "முறை செய்து காப்பாற்றும் மன்னவன்' எனக் காட்டி மன்னன் தான் வகுத்த முறையை நிலைக்கச்செய்ய வேண்டும் என்று திருவள்ளுவரும் வலியுறுத்துகின்றனர். மக்களாட்சியில் முறை செய்யும் மன்னனும், மக்களேயாவர். எனவே முறையைக் காப்பாற்றும் பொறுப்பும் மக்களுக்கு உண்டு.

நல்ல முறையில் மக்களாட்சி இயங்க சட்டங்களும், விதிகளும் நெறிமுறைகளும் பெருந்துணையாகும். எனினும் மனித வாழ்க்கையை விதிகளுக்குள் சிறைப்படுத்த முடியாது. எனவே விதிவிலக்குகளும் பல நிலைகளில் வேண்டும். ஆனால் விதிவிலக்குகள், விதி செய்ததன் நோக்கத்தையே விழுங்கிவிடக் கூடாது.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size