Try GOLD - Free
தண்ணீர் வீணாவதை தடுக்க ஆட்டோமேடிக் ஹேண்ட் வாஷ்பேசின்
Dinakaran Nagercoil
|October 05, 2025
மனித வாழ்வில் அத்தியாவசியமான இயற்கை வளங்களில் முதன்மையானது தண்ணீர். உணவு இல்லாமல் சில நாட்கள் வாழ முடிந்தாலும், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. மனித உடலில் 70% பங்கு தண்ணீரால் ஆனது என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கும், உடலின் இயங்கும் தன்மைக்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு உபயோகத்தில் சமைப்பது, குடிப்பது, சுத்தம் செய்வது போன்ற அனைத்திற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் பெருமளவில் தண்ணீர் பயன்படுகிறது. மழை, ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் ஆகியவையே தண்ணீரின் மூலாதாரங்கள். ஆனால், மக்கள்தொகை அதிகரிப்பு, தொழில்துறை வளர்ச்சி, தண்ணீரை வீணாக்கும் பழக்கம் ஆகியவற்றால் நீர்வளம் குறைந்து வருகிறது.
-
இந்நிலையில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது காலத்திற்கும் தேவையான செயல் ஆகும். மழைநீரை சேமிப்பது, நீர்நிலைகளை காப்பது, தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் வளங்களைச் சிக்கனமாக பயன்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கை கழுவும் பகுதிகளில் தண்ணீர் வீணாகும் நிலை அதிகம் காணப்படுகிறது. ஒரு துளி தண்ணீர் கூட மிக முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் தண்ணீர் மேலாண்மையை திறம்பட செய்ய வேண்டியது காலத்தின் தேவை.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கை கழுவுகின்றனர். மதிய உணவுக்குப் பிறகு, கழிப்பறை பயன்படுத்திய பின், ஆய்வகப் பயிற்சிகளுக்குப் பிறகு தண்ணீர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பல இடங்களில் கை கழுவும் குழாய்கள் பழுதடைந்து தொடர்ந்து தண்ணீர் கசியும் நிலை ஏற்படுகிறது. அது தண்ணீரின் சிறிய ஓட்டம் போலத் தோன்றினாலும், ஒருநாள் முழுவதும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது.
This story is from the October 05, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
தலித் என்பதால் டிஜிபி டார்ச்சர் செய்ததே என் கணவர் தற்கொலைக்கு காரணம்
அரியானா ஏடிஜிபியின் ஐஏஎஸ் மனைவி பரபரப்பு புகார்
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
தமிழக மீனவர்கள் 47 பேர் துப்பாக்கி முனையில் கைது
5 விசைப்படகுகள் பறிமுதல்
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
சனிக்கிழமை நாயகனின் டபுள் கேம் அரசியலில் நிஜ நடிகர்
சினிமாவில் வீர வசனம் பேசி அதிரடி காட்டி ரசிகர்களை கவரும் நடிகர்களில் ஒரு சிலர், நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோவாகத்தான் இருக்கின்றனர். ரீல்ஸ்க் காக வீடியோ போடுப வர்கள் கூட நிஜ வாழ்க் கையில் ஹீரோவாக மாறிவிடுகின்றனர். ஆனால், எங்களுக்கு ரோல் மாடல் என கூறி ஹீரோவாக கொண்டா டப்படும் டாப் சினிமா நடிகரின் ஒரு பேச்சு தான் இப்போது வைரலாகி விமர்சனத் துக்கு உள்ளாகி உள்ளது.
3 mins
October 10, 2025
Dinakaran Nagercoil
இறுதிக்கட்டத்தை எட்டிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் -ஹமாஸ் ஒப்புதல்
இஸ்ரேல் காசா போர் தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தன. இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
சாதிவாரி கணக்கெடுப்பு
கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் புதியதாக மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. 2015ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக பதவியேற்ற போது சாதிவாரி கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது. மேலும் அதன் இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை அமல்படுத்த பாஜ, மஜத கட்சிகள் உள்பட காங்கிரஸ் தலைவர்களே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சி அமைந்த பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 2023ம் ஆண்டு அமைந்தது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கணக்கெடுப்பு நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கும். எனவே அந்த அறிக்கையை கைவிட வேண்டும் என்று பாஜ தலைவர்கள் வலியுறுத்தினர்.
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
காலணி வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
1 min
October 10, 2025
Dinakaran Nagercoil
தென் பெண்ணையாறு நீர் பங்கீடு ஒன்றிய அரசு பிரமாணப்பத்திரம்
தென் பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
October 10, 2025

Dinakaran Nagercoil
புன்னகையை மட்டும் காட்டிட்டு ஆதரவாளர்களை தவிக்க விடும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் இலைக்கட்சி மாஜி கடும் அப்செட்டில் இருக்கிறாராமே..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 mins
October 10, 2025
Dinakaran Nagercoil
நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கன்னியாகுமரி இளைஞர் கைது
1 min
October 10, 2025

Dinakaran Nagercoil
ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு
ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
1 min
October 10, 2025
Translate
Change font size