Prøve GULL - Gratis

தண்ணீர் வீணாவதை தடுக்க ஆட்டோமேடிக் ஹேண்ட் வாஷ்பேசின்

Dinakaran Nagercoil

|

October 05, 2025

மனித வாழ்வில் அத்தியாவசியமான இயற்கை வளங்களில் முதன்மையானது தண்ணீர். உணவு இல்லாமல் சில நாட்கள் வாழ முடிந்தாலும், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. மனித உடலில் 70% பங்கு தண்ணீரால் ஆனது என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கும், உடலின் இயங்கும் தன்மைக்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு உபயோகத்தில் சமைப்பது, குடிப்பது, சுத்தம் செய்வது போன்ற அனைத்திற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் பெருமளவில் தண்ணீர் பயன்படுகிறது. மழை, ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் ஆகியவையே தண்ணீரின் மூலாதாரங்கள். ஆனால், மக்கள்தொகை அதிகரிப்பு, தொழில்துறை வளர்ச்சி, தண்ணீரை வீணாக்கும் பழக்கம் ஆகியவற்றால் நீர்வளம் குறைந்து வருகிறது.

இந்நிலையில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது காலத்திற்கும் தேவையான செயல் ஆகும். மழைநீரை சேமிப்பது, நீர்நிலைகளை காப்பது, தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் வளங்களைச் சிக்கனமாக பயன்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கை கழுவும் பகுதிகளில் தண்ணீர் வீணாகும் நிலை அதிகம் காணப்படுகிறது. ஒரு துளி தண்ணீர் கூட மிக முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் தண்ணீர் மேலாண்மையை திறம்பட செய்ய வேண்டியது காலத்தின் தேவை.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கை கழுவுகின்றனர். மதிய உணவுக்குப் பிறகு, கழிப்பறை பயன்படுத்திய பின், ஆய்வகப் பயிற்சிகளுக்குப் பிறகு தண்ணீர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பல இடங்களில் கை கழுவும் குழாய்கள் பழுதடைந்து தொடர்ந்து தண்ணீர் கசியும் நிலை ஏற்படுகிறது. அது தண்ணீரின் சிறிய ஓட்டம் போலத் தோன்றினாலும், ஒருநாள் முழுவதும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு

உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் எஸ்.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கை உள்ளது

கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை

குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 mins

October 09, 2025

Dinakaran Nagercoil

சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி

அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

ஆந்திராவில் கோர சம்பவம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு

உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட நவிமும்பை விமான நிலையம் திறப்பு

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size