Try GOLD - Free
மாயாஜால மன்னன் விட்டலாச்சார்யா
Dinakaran Nagercoil
|June 08, 2025
இப்போதுள்ள சினிமாவில் நாம் என்ன நினைக்கிறோமோ அதை எளிதில் காட்சிப்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் நம்மால் கிராபிக்ஸ், விஎஃப்எக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தால் கொண்டுவர முடியும். ஆனால் இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத அந்த காலத்தில் ஒரு இயக்குனர் திரையில் மாயாஜால விஷயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். ஃபிலிமில் ஒளிப்பதிவு செய்து அதில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொண்டுவருவது அத்தனை சுலபம் அல்ல. இதை படத்துக்கு படம் செய்தவர் இயக்குனர் விட்டலாச்சார்யா. இவரது பெயரை போஸ்டர்களில் பார்த்தாலே கதையில் எந்தவொரு லாஜிக்கும் பார்க்காமல் மக்கள் சினிமா கொட்டகையை நோக்கி சென்ற காலம் அது.
-

விட்டலாச்சார்யாவின் சினிமா ஆர்வம்
விட்டலாச்சார்யா அன்றைய மதராஸ் மாகாணம் (இன்றைய கர்நாடகா மாநிலம்) உடுப்பியில் உள்ள உதயவாரா என்ற கிராமத்தில் 1920ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு சிறு, சிறு வேலைகள் செய்து வந்தார். பின்னர் உடுப்பியில் சொந்தமாக ஹோட்டல் தொடங்கி நடத்தி வந்தார். 1942ல் 'வெள்ளையனே வெளியேறு' என்ற பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு பெங்களூரு சிறையில் 7 மாதம் இருந்த விட்டல் சுதந்திரத்திற்கு பிறகு காந்தியின் வேண்டுகோளின்படி அரசியலில் இருந்து விலகிவிட்டாராம்.
சிறை தண்டனைக்குப் பிறகு வெளியே வந்து 'டூரிங் சினிமா' என்கிற சினிமா கொட்டகையைத் தொடங்கினார். அங்கு வெளியிடப்படும் படங்களைப் பார்த்து அவருக்கு சினிமா மீது ஆசை ஏற்பட்டது. அதற்காக நிறைய படங்களைப் பார்த்து அது எப்படி உருவாக்கப்படுகிறது என்ற நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டார்.
விட்டலாச்சார்யாவின் சினிமா பயணம்
சினிமாவுக்குள் வருவதற்கு முன்னரே அதைப்பற்றி நன்கு அறிந்து கொண்டு வந்தவர் விட்டலாச்சார்யா. 1952ம் ஆண்டு கன்னடத்தில் தனது முதல் படத்தை சொந்தமாக தயாரித்து, இயக்குகிறார். அப்படத்தின் பெயர் ‘ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம்'. அதனைத் தொடர்ந்து 1953ல் 'ராஜ்ய லட்சுமி', 1954ல் 'கன்யாதானம்', 1956ல் 'முட்டிடே பாக்யா' எனத் தொடர்ந்து 4 படங்களை கன்னடத்தில் தயாரித்து இயக்கினார். இதில் 'கன்யாதானம்' என்ற படத்தில் கருப்பாக இருக்கும் பெண் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியிருப்பார்.
1956ல் தெலுங்கு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் விட்டல் தனது முதல் தெலுங்கு படமான 'ஒத்தண்டபெல்லி' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'அண்ணா செல்லலு', 'பெல்லி மீடா பெல்லி', 'வரலட்சுமி விரதம்', 'பந்தி போட்டு' உள்ளிட்ட படங்களை இயக்கினார். 1959ம் ஆண்டு வெளியான 'பெண் குலத்தின் பொன்விளக்கு' என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.
3டி படம்
இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' 1984ம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டில் இயக்கிய 'ஜெய் வேதாளம்' என்ற 3டி திரைப்படம் தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
This story is from the June 08, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
விஜய் தாமதமாக வந்ததே காரணம்...
முதல் பக்க தொடர்ச்சி
3 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை
ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது
நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
1 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
1 mins
October 11, 2025

Dinakaran Nagercoil
குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை
தஞ்சாவூர் அருகே பயங்கரம்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஜெயஸ்வால் சத வெடி
வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.
1 min
October 11, 2025
Translate
Change font size