試す 金 - 無料
மாயாஜால மன்னன் விட்டலாச்சார்யா
Dinakaran Nagercoil
|June 08, 2025
இப்போதுள்ள சினிமாவில் நாம் என்ன நினைக்கிறோமோ அதை எளிதில் காட்சிப்படுத்தக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும் நம்மால் கிராபிக்ஸ், விஎஃப்எக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தால் கொண்டுவர முடியும். ஆனால் இந்த தொழில்நுட்பம் எதுவும் இல்லாத அந்த காலத்தில் ஒரு இயக்குனர் திரையில் மாயாஜால விஷயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். ஃபிலிமில் ஒளிப்பதிவு செய்து அதில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொண்டுவருவது அத்தனை சுலபம் அல்ல. இதை படத்துக்கு படம் செய்தவர் இயக்குனர் விட்டலாச்சார்யா. இவரது பெயரை போஸ்டர்களில் பார்த்தாலே கதையில் எந்தவொரு லாஜிக்கும் பார்க்காமல் மக்கள் சினிமா கொட்டகையை நோக்கி சென்ற காலம் அது.
-
விட்டலாச்சார்யாவின் சினிமா ஆர்வம்
விட்டலாச்சார்யா அன்றைய மதராஸ் மாகாணம் (இன்றைய கர்நாடகா மாநிலம்) உடுப்பியில் உள்ள உதயவாரா என்ற கிராமத்தில் 1920ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு சிறு, சிறு வேலைகள் செய்து வந்தார். பின்னர் உடுப்பியில் சொந்தமாக ஹோட்டல் தொடங்கி நடத்தி வந்தார். 1942ல் 'வெள்ளையனே வெளியேறு' என்ற பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு பெங்களூரு சிறையில் 7 மாதம் இருந்த விட்டல் சுதந்திரத்திற்கு பிறகு காந்தியின் வேண்டுகோளின்படி அரசியலில் இருந்து விலகிவிட்டாராம்.
சிறை தண்டனைக்குப் பிறகு வெளியே வந்து 'டூரிங் சினிமா' என்கிற சினிமா கொட்டகையைத் தொடங்கினார். அங்கு வெளியிடப்படும் படங்களைப் பார்த்து அவருக்கு சினிமா மீது ஆசை ஏற்பட்டது. அதற்காக நிறைய படங்களைப் பார்த்து அது எப்படி உருவாக்கப்படுகிறது என்ற நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டார்.
விட்டலாச்சார்யாவின் சினிமா பயணம்
சினிமாவுக்குள் வருவதற்கு முன்னரே அதைப்பற்றி நன்கு அறிந்து கொண்டு வந்தவர் விட்டலாச்சார்யா. 1952ம் ஆண்டு கன்னடத்தில் தனது முதல் படத்தை சொந்தமாக தயாரித்து, இயக்குகிறார். அப்படத்தின் பெயர் ‘ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம்'. அதனைத் தொடர்ந்து 1953ல் 'ராஜ்ய லட்சுமி', 1954ல் 'கன்யாதானம்', 1956ல் 'முட்டிடே பாக்யா' எனத் தொடர்ந்து 4 படங்களை கன்னடத்தில் தயாரித்து இயக்கினார். இதில் 'கன்யாதானம்' என்ற படத்தில் கருப்பாக இருக்கும் பெண் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியிருப்பார்.
1956ல் தெலுங்கு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் விட்டல் தனது முதல் தெலுங்கு படமான 'ஒத்தண்டபெல்லி' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'அண்ணா செல்லலு', 'பெல்லி மீடா பெல்லி', 'வரலட்சுமி விரதம்', 'பந்தி போட்டு' உள்ளிட்ட படங்களை இயக்கினார். 1959ம் ஆண்டு வெளியான 'பெண் குலத்தின் பொன்விளக்கு' என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.
3டி படம்
இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' 1984ம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டில் இயக்கிய 'ஜெய் வேதாளம்' என்ற 3டி திரைப்படம் தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
このストーリーは、Dinakaran Nagercoil の June 08, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது
வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்
உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை
பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
3 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 mins
June 16, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு
1 min
June 16, 2026
Dinakaran Nagercoil
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min
June 16, 2026
Dinakaran Nagercoil
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2 mins
June 16, 2026
Dinakaran Nagercoil
பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்
ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
June 15, 2026
Translate
Change font size

