Try GOLD - Free

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

DINACHEITHI - NAGAI

|

June 21, 2025

சென்னை ஜூன் 21தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம்-கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாகப் பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டுப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

MORE STORIES FROM DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி தீர்மான கடிதம்

பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அளித்தனர்

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - NAGAI

சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு

திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜன. 25-க்குள் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு

தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

time to read

1 min

December 10, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னையில் போதை பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது

துணை நடிகைகளும் சிக்குகிறார்கள்

time to read

1 min

December 09, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

2047-வது ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும்

வந்தேமாதரம் பாடல் உருவாகி 175-வது ஆண்டையொட்டி, பாராளுமன்றத்தில் விவாதம்

time to read

1 min

December 09, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாட்டின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் கட்டப்படவுள்ள சிறு விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 23 முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

time to read

2 mins

December 09, 2025

DINACHEITHI - NAGAI

தமிழகத்தில் சமத்துவ தீபம் எரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும், வளர்ச்சியின் ஒளி பெருகும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

December 08, 2025

DINACHEITHI - NAGAI

பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம்:

time to read

1 min

December 06, 2025

Translate

Share

-
+

Change font size