Facebook Pixel 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | DINACHEITHI - NAGAI - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

DINACHEITHI - NAGAI

|

June 21, 2025

சென்னை ஜூன் 21தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம்-கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாகப் பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டுப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

DINACHEITHI - NAGAI からのその他のストーリー

DINACHEITHI - NAGAI

காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NAGAI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - NAGAI

"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

DINACHEITHI - NAGAI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NAGAI

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NAGAI

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - NAGAI

மழை காலத்தில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள்

மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

time to read

1 min

June 19, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை

அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

time to read

1 min

June 19, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

புதுச்சேரியில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு

அமைச்சரவை விரிவாக்கம்:

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size