Newspaper
Dinamani Perambalur & Ariyalur
இலங்கை முன்னாள் அமைச்சர் இல்லத் திருமண விழா
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு
1 min |
November 24, 2025
Dinamani Perambalur & Ariyalur
மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்
சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.
1 min |
November 24, 2025
Dinamani Perambalur & Ariyalur
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 min |
November 24, 2025
Dinamani Perambalur & Ariyalur
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 min |
November 24, 2025
Dinamani Perambalur & Ariyalur
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததால் 69,258 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
தந்தைக்கு மகள்கள் அளித்த பரிசு...
ஏழு பெண்களை வளர்த்து, அவர்களைப் படிக்க வைத்து தன்னிறைவு பெற்ற மகள்களாக மாற்றியுள்ளார் கமல் சிங். அவரது ஏழு பெண்களும் காவல்துறையில் பல பிரிவுகளில் பணிபுரிவது சிறப்பு. இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பெற்றோரை மட்டுமல்ல; பீகார் மாநிலத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். தந்தையின் கனவை நனவாக்கிய மகள்களுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
ஜி20: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை
தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தென்கொரிய அதிபர் லீ ஜே-மியூங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
அறந்தலைப்பிரியா ஆறு எது?
பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.
2 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கடன் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தேசிய வங்கியில் ரூ.6.10 கோடி கடன் பெற்று மோசடி செய்த தனியார் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
140 பட்டங்கள்...
இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
பதிப்புலகின் முன்னோடி...
தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
2 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
குரூப்-2, 2-ஏ தேர்வு எழுதிய தேர்வர்கள் கவனத்துக்கு...
குரூப்-2, 2-ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதிய தேர்வர்கள், குறிப்பிட்ட பத்தியில் ஆம், இல்லை என்பதை செவ்வாய்க்கிழமை (நவ.25) இரவுக்குள் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
ஏழையின் நடனத்தில் இறைவனைக் காணலாம்!
ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி என்னிடம் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் நடனத்தில் சிறந்து விளங்கி மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். இப்படி என்னை அழ வைத்த பிள்ளைகள் ஏராளம். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட கலையை அவர்கள் வெளிப்படுத்தும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதற்குத் தான் இந்தப் பிறவி எடுத்தோம் என்று தோன்றும்\" என்கிறார் பார்வதி ரவி கண்டசாலா.
2 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
காதா சப்த சதியும் கலிங்கத்துப் பரணியும்...
காதா சப்த சதி என்ற நூல் பிராகிருத மொழியின் கிளைப் பிரிவுகளில் ஒன்றான மகாராஷ்டிரீ மொழியில் இயற்றப்பட்டுள்ளது. சங்க அக இலக்கிய நூல்களுக்கும் இதற்குமான ஒப்புமைகள் குறித்து அறிஞர் ஜார்ஜ் எல்.ஹார்ட் விரிவாக எழுதியுள்ளார். கா(ஹா)தா எனில் நான்கு அடிகளாலான பாடத்தகுந்த யாப்பு வகை என்றும், சப்த சதி எனில் 700 பாடல்கள் என்றும் பொருள். இந்நூல் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன மன்னன் ஹாலனால் தொகுக்கப்பட்டது என்கிறார் இரா. மதிவாணன். ஆனால், கி.பி. 200-க்கும் 450-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
நெஞ்சினிலே... நெஞ்சினிலே...
சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.
2 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு
தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
துபை வான் சாகசத்தில் இந்திய விமானி உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்
துபை வான் சாகசத்தில் இந்திய விமானப் படை விமானி உயிரிழந்த நிலையில், அவரின் சொந்த கிராமமான ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கர் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாகியுள்ளனர்.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை
புது தில்லி, நவ. 22: நடப்பு நிதி யாண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த சரக்கு போக்குவரத்து, கடந்த புதன்கிழமை (நவ. 19) நிலவரப்படி 100 கோடி டன்னைத் தாண்டி ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
காயத்தான்-வாகனத்தான்-அழியான்
தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.
1 min |
November 23, 2025
Dinamani Perambalur & Ariyalur
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.
2 min |
November 22, 2025
Dinamani Perambalur & Ariyalur
2 நாள் உயர்வுக்குப் பின் பங்குச் சந்தை சரிவு
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் டிசம்பரில் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை மங்கியது மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாள் உயர்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min |
November 22, 2025
Dinamani Perambalur & Ariyalur
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வெள்ளிக்கிழமை (நவ.21) ஓய்வு பெற்றார்.
1 min |
November 22, 2025
Dinamani Perambalur & Ariyalur
கூட்டத்தின் பாதுகாப்புக்கு கட்சிகளே பொறுப்பு
தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
2 min |
November 22, 2025
Dinamani Perambalur & Ariyalur
துபையில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி உயிரிழப்பு
துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய ஹிமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.
1 min |
November 22, 2025
Dinamani Perambalur & Ariyalur
3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து
ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.
1 min |
November 21, 2025
Dinamani Perambalur & Ariyalur
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்
உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது.
1 min |
November 21, 2025
Dinamani Perambalur & Ariyalur
2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு
எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min |
November 21, 2025
Dinamani Perambalur & Ariyalur
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேரைக் காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில், 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் எடுத்துள்ளது. இவர்களையும் சேர்த்து, இந்த வழக்கில் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கும் நபர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
November 21, 2025
Dinamani Perambalur & Ariyalur
குவாஹாட்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம்
இந்தியா - தென்னாப்பிரிக்கா 2 - ஆவது டெஸ்ட்டில் விளையாடும் குவாஹாட்டி மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதுபோல் தெரிவதாக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பீட் போத்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
November 21, 2025
Dinamani Perambalur & Ariyalur
கிரக தோஷங்கள் போக்கும் தலம்
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.
1 min |