Facebook Pixel வகை வகையாய் வாரிசுகள்! | Kanmani - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

வகை வகையாய் வாரிசுகள்!

Kanmani

|

November 05, 2025

தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

- பரிதி

வகை வகையாய் வாரிசுகள்!

ஊர்க்கதை பேசுகிறவர்கள் யார் கதையாவது கிடைக்காதா என்று அலைவதுபோல், அரசியல் சூழ்நிலையை பேசுவதற்கு தற்போதைக்கு பீகார் தேர்தல் தான் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. இந்திய அரசியலின் டிரெண்டுக்கு ஏற்ப இங்கும் வாரிசு வேட்பாளர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ராஷ்டிரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார்.

பா.ஜனதா சார்பில் தாராபூர் தொகுதியில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி நிற்கிறார். அவரது தந்தை சகுனி சவுத்ரி ஏழு முறை எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யாக இருந்துள்ளார், அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். தாய் பார்வதி தேவி, தாராபூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

இவருக்கும் நம் பிரதமருக்கு போல் கல்வி சான்றிதழில் வில்லங்கம் இருக்கிறது. அடிப்படை கல்வியை முடித்த பிறகு, அவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் (ஆம், நம் பல்கலைக்கழகத்தில் தான்) உயர் கல்வியை பெற்றதாக கூறியுள்ளார். இதில் தான் சர்ச்சையே எழுந்துள்ளது. அவரே சில சமயங்களில் தனது பிரமாணப் பத்திரத்தில் 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக காட்டுகிறார்.

பிறகு எப்படி பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியும்? என்ற கேள்வி பிரதானமாக உள்ளது.

தேர்தலில் முறைகேடு, ஆள்மாறாட்டம், அதிகாரி உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.

மேலும் ஜன் சுராஜ் அமைப்பின் நிறுவனரும் தேர்தல் வியூக அமைப்பாளருமான பிரசாந்த் கிஷோர், '1995-ஆம் ஆண்டு தாராபூரில் ஏழு பேர் கொல்லப்பட்ட கொலை வழக்கில் சாம்ராட் சவுத்ரி குற்றம் சாட்டப்பட்டவர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஏழு பேரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், சம்பவ காலகட்டத்தில் தான் மைனர் என்பதை நிரூபிக்க, பிறந்த வருடம் 1981 என காட்டும் பள்ளி அனுமதிச் சீட்டை சமர்ப்பித்தார். அதன்படி சம்பவம் நடந்த 1995-இல் அவருக்கு 15 வயது. ஆனால், 2020 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரது வயது 51 என குறிப்பிடப்பட்டு இருந்ததை பார்க்கும்போது, 1995-இல் அவருக்கு 26 வயது இருக்கும். எனவே, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இவர் அரசியலமைப்புச் சட்டப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறையில் இருக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.

MORE STORIES FROM Kanmani

Kanmani

Kanmani

பெண்களுக்கு சவால்கள் அதிகம்!

மனம் கொத்திப் பறவை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மியா ராஜன்.

time to read

2 mins

April 29, 2026

Kanmani

Kanmani

எம்.பி.க்கள் அதிகரிப்பு... வெட்டி செலவு எதற்கு?

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கும் தொகுதி மறுவரையறை மசோதா 2026, நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் தாக்கலானது.

time to read

2 mins

April 29, 2026

Kanmani

Kanmani

கோல்ட் லோனில் வாழ்க்கையை கடத்தும் தென் மாநில மக்கள்!

அவசர செலவு என்ற பெயரில் இன்று பலரும் நகைக் கடன் நிறுவனங்களை நாடி செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.

time to read

2 mins

April 29, 2026

Kanmani

Kanmani

போலி எடை குறைப்பு ஊசிகள் கவனம்!

இப்போது எங்கு பார்த்தாலும் அழகு நிலையங்கள், உடல் எடை குறைக்கும் ஜிம்கள் பெருகிவிட்டன.

time to read

1 mins

April 29, 2026

Kanmani

Kanmani

சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள்...

ஈரோடு, தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொழில் மற்றும் விவசாய நகரங்களில் ஒன்று.

time to read

3 mins

April 29, 2026

Kanmani

Kanmani

தமிழ்நாடு அடையாள அட்டை அவசியம் ஏன்?

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரத்தில் பிரசாரம் செய்த நடிகர் விஜய், “தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த 6 மாதத்திற்குள் 'வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.

time to read

3 mins

April 29, 2026

Kanmani

Kanmani

கிரிக்கெட் வீரர்களை கவிழ்க்கும் நடிகைகள்!

கிரிக்கெட் வீரர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையிலான 'கிளுகிளு’ தொடர்புகள் காலம் காலமாக சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

April 29, 2026

Kanmani

Kanmani

காளான் விலை 40 ஆயிரம் !

சமீப காலமாக உணவுகளில் காளான் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

time to read

1 min

April 29, 2026

Kanmani

Kanmani

எதையும் முழு மனதோடு செய்வேன்!

ராஷ்மிகா பாணியில் பான்-இந்தியா நாயகியாக உருவாகிக் கொண்டு இருப்பவர் நடிகை ஸ்ரீலீலா.

time to read

3 mins

April 29, 2026

Kanmani

Kanmani

உயிரே.... உயிரே.. விலகாதே!

கற்றல் மகிழ்ச்சியுடன் அசைந்து கொண்டிருந்த கொடியொன்று திடீரென வீசிய புயலில் நிலைகுலைந்து போனதைப் போன்ற நிலைமை அங்கு அப்பட்டமாகத் தெரிந்தது.

time to read

1 mins

April 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size