試す - 無料

வகை வகையாய் வாரிசுகள்!

Kanmani

|

November 05, 2025

தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

- பரிதி

வகை வகையாய் வாரிசுகள்!

ஊர்க்கதை பேசுகிறவர்கள் யார் கதையாவது கிடைக்காதா என்று அலைவதுபோல், அரசியல் சூழ்நிலையை பேசுவதற்கு தற்போதைக்கு பீகார் தேர்தல் தான் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. இந்திய அரசியலின் டிரெண்டுக்கு ஏற்ப இங்கும் வாரிசு வேட்பாளர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ராஷ்டிரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார்.

பா.ஜனதா சார்பில் தாராபூர் தொகுதியில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி நிற்கிறார். அவரது தந்தை சகுனி சவுத்ரி ஏழு முறை எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யாக இருந்துள்ளார், அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். தாய் பார்வதி தேவி, தாராபூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

இவருக்கும் நம் பிரதமருக்கு போல் கல்வி சான்றிதழில் வில்லங்கம் இருக்கிறது. அடிப்படை கல்வியை முடித்த பிறகு, அவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் (ஆம், நம் பல்கலைக்கழகத்தில் தான்) உயர் கல்வியை பெற்றதாக கூறியுள்ளார். இதில் தான் சர்ச்சையே எழுந்துள்ளது. அவரே சில சமயங்களில் தனது பிரமாணப் பத்திரத்தில் 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக காட்டுகிறார்.

பிறகு எப்படி பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியும்? என்ற கேள்வி பிரதானமாக உள்ளது.

தேர்தலில் முறைகேடு, ஆள்மாறாட்டம், அதிகாரி உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.

மேலும் ஜன் சுராஜ் அமைப்பின் நிறுவனரும் தேர்தல் வியூக அமைப்பாளருமான பிரசாந்த் கிஷோர், '1995-ஆம் ஆண்டு தாராபூரில் ஏழு பேர் கொல்லப்பட்ட கொலை வழக்கில் சாம்ராட் சவுத்ரி குற்றம் சாட்டப்பட்டவர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஏழு பேரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், சம்பவ காலகட்டத்தில் தான் மைனர் என்பதை நிரூபிக்க, பிறந்த வருடம் 1981 என காட்டும் பள்ளி அனுமதிச் சீட்டை சமர்ப்பித்தார். அதன்படி சம்பவம் நடந்த 1995-இல் அவருக்கு 15 வயது. ஆனால், 2020 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரது வயது 51 என குறிப்பிடப்பட்டு இருந்ததை பார்க்கும்போது, 1995-இல் அவருக்கு 26 வயது இருக்கும். எனவே, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இவர் அரசியலமைப்புச் சட்டப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறையில் இருக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.

Kanmani からのその他のストーリー

Kanmani

Kanmani

தூக்கி நிறுத்திய நம்பிக்கை!

தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!

முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!

பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!

அது ஒரு அழகிய சிறிய கிராமம்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

இன்னொருத்தி தேவை!

காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.

time to read

53 mins

November 05, 2025

Kanmani

Kanmani

மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!

நகரங்களில் பெருதி வரும் எலிகள்!

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!

குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

வைரம் - தங்கத் துகள் சோப்பூ

மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

time to read

1 min

November 05, 2025

Kanmani

Kanmani

குறட்டைக்கு நன்றி!

தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

time to read

3 mins

November 05, 2025

Kanmani

Kanmani

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.

time to read

3 mins

November 05, 2025

Listen

Translate

Share

-
+

Change font size