அல்லது எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் பரந்தாமனையே மனம் உருவகித்துக் கொள்வது, அந்தப் பரம்பொருளையே ஒரே முனைப்பாக்கி அறிந்துகொள்வதுதான் புலனடக்கம் என்று சொல்லலாமா? இவை யெல்லாவற்றிலும் மேலான புலனடக்கம் என்பது எது? எங்கும், எதிலும், எப்போ தும் எல்லா இந்திரியங்களிலும் பகவானை மனம் ஸ்பரிசிப்பதுதானே!
"ஞானிகள், இந்திரியங்களின் இந்தச் செயல்களை, அவற்றால் மனம் அனுபவிக்கும் உணர்வுகளை, தம் ஞானத்தால் பிரகாசமான பரமாத்மா என்ற தம் ஆன்மாவில், அந்த யோகாக்னியில் ஆஹுதியாக்குகிறார்கள்." ஞானி என்பவர் யார்? தன்னை உணர்ந்தவர், தன்னையே பரமாத்மாவாக உணர்ந்தவர். அஞ்ஞானி என்பவர் யார் ? தன்னையே உண ராதவர், அதனாலேயே பரமாத் மாவையும் உணர முடியாதவர்! ஞானி, தீபம் ஒளிர, தான் எண்ணெ யாகிறார். ஹோமம் வளர, தான் நெய்யாகிறார். அதாவது, எண்ணெயே, நெய்யே தீபமாகிறது, அக்னியாகிறது.
தான் அப்படியே பரமாத் மாவுடன் கலந்து விடுவதுதான் ஞானியின் இயல்பு. இந்தப் பக்குவம், இந்த வித்தை, கைவராதவர்கள் அஞ்ஞானிகளாகவே இருக்கிறார்கள். தினமும் வீட்டில் பூஜை செய்கிறோம். இறைவனுக்கு மலர்களை சமர்ப்பிக்கிறோம். நறுமணம் கமழும் ஊதுவத்திகள் ஏற்றி வைக்கிறோம். பிர சாதங்கள் சமைத்து படைக்கிறோம். இது சராசரியான பூஜைமுறை.
ஆனால், ஞானி எனப்படுபவர், ஆத்ம நிவேதனம் செய்பவர். தனக்குள் இந்த ஜன்மத்தில், அப்போதைக்குத் தற்காலிகமாகக் குடிகொண்டிருக்கும், அழிவேஇல்லாத ஆன்மாவையே இறைவனுக்கு அர்ப்பணிக்கிறார். அவருக்குத் தெரியும் ஆன்மா பகவா னுக்கு மட்டுமே சொந்தமானது, தான் அதற்கு உரிமை கொண்டாட முடியாது என்று.
This story is from the 16-29-Feb 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 16-29-Feb 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.