முக்கோடி தேவர்கள், யோகிகள், முனிவர்கள், ரிஷிகள், கந்தவர் கள், அரசர்கள் என அனைவர் கண்களும் அமிர்தத்தைப் பருகின. உலகில் உள்ள புல், பூண்டு, செடி, கொடிகள், மலைகள், நீர்நிலை கள், பூச்சிகள், பறவை இனங்கள், விலங்கு கள் ஆகியவையாவும் சந்தோஷமும் பிறவிப் பயனும் பெற்றன. பிரம்மாவும், விஷ்ணுவும் விருந்தினராகச் சுற்றமும் நட்பும் கூடிய இந்த நேரத்தில் உயிரினங்கள் அத்தனையும் வடதிசைக்கு படையெடுத்துச் சென்றன. அதனால், வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. மக்கள் நிலை குலைந்தனர்.
தேவர்கள் அஞ்சினர். நிற்க முடியாமல் உயிரினங்கள் பரிதவித்தன. இந்த சூழலை மாற்றி அமைக்க சிவபெருமான், அகத்தியர் பெருமானை அழைத்து, 'வடதிசை சமன் இல்லாமல் தத்தளிக்கின்றது. ஆகவே, நீ தென்திசைக்கு சென்று, சமநிலைப்படுத்து என்று கூறினார்.
இதனால் அகத்திய பெருமான், சிவ பெருமாலின் திருமணக் காட்சியைப் பார்க்காமல் செல்வதை எண்ணி கலக்கம் அடைந்தார். 'நீநினைக்கும் பொழுது காட்சி தருகிறேன் என்று உறுதி அளித்து அகத்தி யரை, சிவபெருமான் அனுப்பிவைத்தார். அகத்தியர் வந்து தங்கிய இடம் பொதிகை மலையில் உள்ள தோரணமலையாகும். பல சீடர்கள் அவருக்கு உருவாயினர். அவர்கள் மூலிகைகளின் தன்மையை ஆராய்ந்தனர்.
ஒரு சமயம், அகத்தியர், மலையில் தங்கி இருந்த பொழுது, ஒளவை மூதாட்டியார் ஒரு சிறுவருடன் அம்மலை ஏறி வருவதைக் கண்டார்.
''கற்றோரைக் கண்டு கற்றாரே காமுறு வர்” அவ்வை மூதாட்டியை கண்டதும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். தன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தார். 'அம்மையே வருக! வருக!! என வரவேற்று, இத்தனை தூரம் வந்ததன் காரணம் என்ன?' என்று கேட்டு அறிந்தார். உடன் வந்த சிறுவனைக் காண் பித்து, இவன் பெயர் பொன்னுரங்கன் என்று அகத்தியருக்கு அறிமுகப்படுத்திவைத்தார். நல்ல பெயரைதான் வைத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார் அகத்தியர். இவனு டைய தாய், தர்மசௌமியர் என்கின்ற முனி வரிடத்தில் பணியாற்றி வந்தாள். அவள், யாகத்திற்கு தேவையானச் சுள்ளிகளைப் பொறுக்கி, அவர்களுக்கு தேவையானப் பணிவிடைகள் செய்துவந்தாள். ஒரு நாள், அவளை பாம்பு கடித்தது. இதனால் அவள் இறந்தும் போனாள். அந்தோ! பாவமே, பெற்றோரை இந்த சிறிய வயதிலே இழந்து வாழ்வதா? என்று துயரமுற்றார் அகத்தியர்.
This story is from the January 16, 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 16, 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.