செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
Aanmigam Palan|16-29-Feb 2024
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

மணல் திட்டில் அமர்ந்து கொண்டு, சுந்தரத் தமிழில் அழகாகப் பாடவும் செய்தார். பாண்டிய நாட்டில், பிறந்தவர் அவர். இவரது இளமை பருவத்தில், தவத்தில் சிறந்த முனிவர் ஒருவர், இவருக்கு முருகனின் ஆறு எழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதை விடாமல் ஜெபித்து வந்தார் இந்த கந்தசாமி புலவர். முருகன் அருளால், அழகு, அறிவு, மகிமை, தேஜஸ், இளமை, நொடியில் கவிப் பாடும் திறன் எனப் பலவும் அவரை வந்து அடைந்தது. கேட்போர் மனம் குழையும் அளவு, கவிப்பாடும் வல்லமையைப் பெற்றார் அவர்.

செந்தில் ஆண்டவனுக்கு, சுந்தரத் தமிழால் பாமாலைகளை சாற்றி வழிபடும் எண்ணத்தோடு திருச்செந்தூர் வந்தார்.

கந்தனை கண்ணார கண்டவர், இப்போது வாயாரக் கவிதை மழைப் பொழியத் தொடங்கினார். கோயிலில், அர்த்த ஜாம பூஜைகள் முடிந்து, நடைச் சாற்றப்பட்டுவிட் டது. அவர் அமர்ந்திருந்த மணல் திட்டின் அருகே, யாருமே இல்லை. திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் இருந்த அந்த மணல் திட்டில், தன்னந்தனியாக அமர்ந்திருந்தார், புலவர்.

"நீ தனியாக இல்லை. அப்பனே.. நானும் உன் உடனேயே இருக்கிறேன்” என்று சொல்வது போல கடல் அன்னை அலையோசை எழுப்பியப் படி இருந்தாள். நிலவும் மென் மையான தனது பால் நிற ஒளியை வீசியப் படி இருந்தது. கடலில் இருந்து வீசும் வாடை காற்று, இதமாக இருந்தது.

ஆனால், இது எதையும் ரசிக்காமல் உள்ளத்தில், கந்தன் திருவடியை பதித்து, அதை எண்ணியப்படி அகம் மகிழ்ந்துக் கவிதை மழையைப் பொழிந்து கொண்டு இருந்தார் அவர்.

அப்போது திடீர் என்று, தனதுப் பாட்டை நிறுத்தியவர், தனது கையில் அடக்கி வைத்திருந்த ஒரு சிறுப் பெட்டியை திறந் தார். அதில், வெற்றிலையும் பாக்கும் இருந்தது. ஒரு சிறுப் பாக்கு துண்டை வெற்றிலையில் வைத்து மடித்து, அதை வாயினுள் திணித்துக் கொண்டார்.

பிறகு, அதை மென்று கொண்டே பாடினார். நொடிகள் நிமிடங்கள் ஆகி உருண்டு ஓடியது. இதற்குள், தமிழ்ப் பாடியப் படி, வாயில் இருந்த வெற்றிலையை நன்றாக மென்று இருந்தார், புலவர். தனது இதழ்களின் மீது இரண்டு விரலை வைத்து, அதன் வழியே வாயில் இருந்த வெற்றிலையை வெளியே உமிழ்ந்தார்.

பிறகு பாடத் தொடங்கினார். இப்படியே அன்று இரவு கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்தது. கோயிலின் நடையை சுப்ரபாதம் பாடி திறந்தார்கள் சிவாச்சாரியார்கள். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது.

This story is from the 16-29-Feb 2024 edition of Aanmigam Palan.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the 16-29-Feb 2024 edition of Aanmigam Palan.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM AANMIGAM PALANView All
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
Aanmigam Palan

திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்

சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.

time-read
3 mins  |
16-29-Feb 2024
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
Aanmigam Palan

மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்

இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.

time-read
3 mins  |
16-29-Feb 2024
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
Aanmigam Palan

'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு

니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?

time-read
4 mins  |
16-29-Feb 2024
வீரவசந்த வைபோகன்
Aanmigam Palan

வீரவசந்த வைபோகன்

வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.

time-read
1 min  |
16-29-Feb 2024
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
Aanmigam Palan

திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்

தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.

time-read
1 min  |
16-29-Feb 2024
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
Aanmigam Palan

குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.

time-read
1 min  |
16-29-Feb 2024
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
Aanmigam Palan

செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.

time-read
3 mins  |
16-29-Feb 2024
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
Aanmigam Palan

கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்

முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

time-read
4 mins  |
January 16, 2024
துறவா? உறவா?
Aanmigam Palan

துறவா? உறவா?

துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.

time-read
3 mins  |
January 16, 2024
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
Aanmigam Palan

தேரை எடுத்த தேரையர் சித்தர்!

முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.

time-read
6 mins  |
January 16, 2024