இரக்க குணம், கல்வி, ஒற்றுமை போன்ற உயரிய குணங்கள் உடைய மகனை தந்தருளும் படி இறைவனை மனமார வேண்டி வணங்கினார்கள். ஆனாலும், அந்த சிவநேய தம்பதிகள், "குழந்தைக்கு நல்ல உரு வம் வேண்டும்" என்பதை இறைவனிடம் கேட்க மறந் தார்கள். ஒரு நாள், ஒரு சிவ னடியார் அவர்கள் வீட் டிற்கு உணவருந்த வந்தார்.
அவர்களது உபசரிப்பால், மனமகிழ்ந்த அவர், தான் உண்ட மிகுதியை அந்த சிவநேய செல்வர்களுக்கு கொடுத்து உண்ணும்படி சொன்னார். அவர்களும் சிவனடியார் தந்த மிகு தியை, சிவபிரசாதமாக எண்ணி உண்டனர். அதன் பலனாகசிவசரணா தேவி கருவுற்றாள். பத்து மாதங் கள் கழித்து இரட்டையர் களை பெற்று எடுத்தாள், அம்மையார். ஆனால் விதி வசத்தால், இரட்டையரில் ஒருவர் முடமாகவும், மற்றொருவர் குருடாகவும் பிறந்தார்கள்.
பெற்று எடுத்த பிள் ளைகளிடம் இருந்த குறையை கண்டு மனம் வருந்தினார்கள், தம்பதி கள். இருப்பினும், ஈசன் அருளால் பிறந்த குழந்தை என்பதால், இறைவன் தங்களுக்கு நன்மையே செய்வார் என்று எண்ணி அவரையே சரண் புகுந்தார்கள். அவர்களது அயராத சிவபக் தியால், மனம் கனிந்த ஈசன், இருவரது கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றினார்.
"முன்னொரு காலத்தில், தேவ மருத் துவர்களான அஸ்வினி குமாரர்கள், ஒரு முனிவருக்கு அபசாரம் இழைத்ததால் பூமி யில், முடமாகவும், குருடாகவும் பிறக்கும் படி அவரிடமிருந்து சாபம் பெற்றார்கள்.
அந்த சாபத்தின் விளைவாகதான் அஸ் வினி தேவர்கள், உங்களுக்கு மகன்களாக பிறந்திருக்கிறார்கள். தங்கத்தில் குறை இருந் தாலும், அதன் தரத்தினில் குறை இருப்ப தில்லை. அதை போலவே, அவர்களது அங்கத்தில் குறை இருந்தாலும், அவர்களது ஞானத்திலும், அறிவிலும் குறை இருக்காது. ஆசிகள்" என்றுகூறி மறைந்தார், ஈசன்.
இருவரது கனவிலும் ஒரே சமயம் தோன்றி, இறைவன் சொன்னதை வேதவாக்காக அந்த சிவநேய தம்பதிகள் கொண்டார் கள். இறைவனை மேலும் உருகிஉருகி பக்தி செய்தார்கள்.
This story is from the January 16, 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 16, 2024 edition of Aanmigam Palan.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.