Facebook Pixel கவலை தரும் கல்வியின் தரம் | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கவலை தரும் கல்வியின் தரம்

Dinamani Madurai

|

August 07, 2025

கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை பெற பாடத்திட்டங்களும் தேர்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.

- டி.எஸ். தியாகராசன்

அமெரிக்க ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளர்களில் பத்து நபர்களில் ஒன்பது பேர் குறைந்த செயல் திறன் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவர்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது. இவர்கள் வீதியில் விற்பனை செய்வோர், வீட்டுப் பணியாளர்கள், கை கால் களைக் கொண்டு தொழில்களை இயக்குவோர் என்று வகைப்படுத்தி உள்ளனர்.

இந்த மாதிரியான தொழிலாளர்களை வொகேஷனல் பாடப்பிரிவுகளில் சேர்த்து பயிற்சி கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகர், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்கால தொழிலாளர் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25% பட்டதாரிகள் மட்டுமே அவர்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களை மூன்று என்ற தரவரிசையில் சேர்க்கிறார்கள். 88 % தொழிலாளர்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.

மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தர், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோர் என்கிறார். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவர்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறார்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவர்கள்.

பொதுவாக, தொழிலாளர்கள் முறையான கல்வியில் நன்கு தேர்ச்சி பெறாதவர்கள். இப்படி கற்ற கல்வி பணியாற்றுவதற்கோ, தொழில் புரிவதற்கோ ஏற்றதாக இல்லை; 'மிஸ் மேச்' என்கிறார் அமைச்சர்.

இதன்மூலம் தெரிய வருகிற உண்மை என்னவென்றால், தொழிலாளர் பணிக்கான தேவைச் சந்தையில் தகுதியானவர்கள் இல்லை என்பதே. தொழில் திறன் தர வரிசையில் உள்ள இரண்டாவது பிரிவினர் ஆண்டு ஊதியத்தில் 5, 6 % அளவில் உயர்வு பெறுகின்றனர்.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

லெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்

'லெபனான், சிரியா, காஸா பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளின்மூலம் அண்மையில் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது' என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Madurai

கல்வி உதவித் தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள்

பெற்றோருக்கு கல்வித் துறை எச்சரிக்கை

time to read

1 mins

June 16, 2026

Dinamani Madurai

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தேர்வர்கள் அதனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுகூட்டல், மதிப்பீட்டுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Madurai

உக்ரைனில் ரஷியா வான்வழித் தாக்குதல்

11 பேர் உயிரிழப்பு; பழங்கால தேவாலயம் சேதம்

time to read

1 min

June 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞர் கைது

time to read

1 mins

June 16, 2026

Dinamani Madurai

பரிசுகளை ஏற்பதில் கவனம் தேவை!

ம னிதர்களிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அன்பும் கனிவும் மிக்க வார்த்தைகளைப் போல பரிசளித்தல் எனும் பண்பின் பங்கும் அளப்பரியது.

time to read

2 mins

June 16, 2026

Dinamani Madurai

ஐடிஐ சேர்க்கைக்கான கலந்தாய்வு அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) நேரடி சேர்க்கை கலந்தாய்வுக்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Madurai

கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் வரும் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Madurai

'இண்டி' கூட்டணியிலிருந்து திமுக விலகவில்லை

'இண்டி' கூட்டணியில் இருந்து திமுக விலகவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Translate

Share

-
+

Change font size