कोशिश गोल्ड - मुक्त
கவலை தரும் கல்வியின் தரம்
Dinamani Madurai
|August 07, 2025
கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை பெற பாடத்திட்டங்களும் தேர்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.
அமெரிக்க ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளர்களில் பத்து நபர்களில் ஒன்பது பேர் குறைந்த செயல் திறன் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவர்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது. இவர்கள் வீதியில் விற்பனை செய்வோர், வீட்டுப் பணியாளர்கள், கை கால் களைக் கொண்டு தொழில்களை இயக்குவோர் என்று வகைப்படுத்தி உள்ளனர்.
இந்த மாதிரியான தொழிலாளர்களை வொகேஷனல் பாடப்பிரிவுகளில் சேர்த்து பயிற்சி கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகர், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிர்கால தொழிலாளர் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25% பட்டதாரிகள் மட்டுமே அவர்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களை மூன்று என்ற தரவரிசையில் சேர்க்கிறார்கள். 88 % தொழிலாளர்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.
மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தர், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோர் என்கிறார். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவர்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறார்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவர்கள்.
பொதுவாக, தொழிலாளர்கள் முறையான கல்வியில் நன்கு தேர்ச்சி பெறாதவர்கள். இப்படி கற்ற கல்வி பணியாற்றுவதற்கோ, தொழில் புரிவதற்கோ ஏற்றதாக இல்லை; 'மிஸ் மேச்' என்கிறார் அமைச்சர்.
இதன்மூலம் தெரிய வருகிற உண்மை என்னவென்றால், தொழிலாளர் பணிக்கான தேவைச் சந்தையில் தகுதியானவர்கள் இல்லை என்பதே. தொழில் திறன் தர வரிசையில் உள்ள இரண்டாவது பிரிவினர் ஆண்டு ஊதியத்தில் 5, 6 % அளவில் உயர்வு பெறுகின்றனர்.
यह कहानी Dinamani Madurai के August 07, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Madurai
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025
Translate
Change font size