Try GOLD - Free
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
Dinamani Cuddalore
|January 03, 2026
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
-
நாட்டில் அவசர நிலை பிரகடனத்தின்போது அதை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுத்து, கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மேலும், இலக்கியமும், அச்சமில்லாமல் கருத்து தெரிவிப்பதும் ஜனநாயகத்துக்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் மூன்றாம் ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகைத் துறையின் முன்னோடியுமான மறைந்த ராம்நாத் கோயங்காவின் நினைவாக சிறந்த இலக்கியப் படைப்பு எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. நிகழாண்டுக்கான விருதுகளுக்கு தேர்வான கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த புனைவுப் பிரிவில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சுபிதாபாவுக்கும் (நூல்: டேல்ஸ் ஃபிரம் தி டான்லிட் மவுன்ட்டன்ஸ்), அபுனைவு பிரிவில் எழுத்தாளர் சுதீப் சக்கரவர்த்திக்கும் (நூல்: ஃ பாலன் சிட்டி), அறிமுக எழுத்தாளர் நேஹா தீக்ஷித்துக்கும் (நூல்: தி மெனி லைவ்ஸ் ஆஃப் சயீதா எக்ஸ்) விருதுகளையும், பரிசுத் தொகையையும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்த்திய உரை: சமூகத்துக்கான உயரிய சிந்தனைகளைக் கொண்டிருந்தார் ராம்நாத் கோயங்கா. பத்திரிகையை அறிவுசார் துணிச்சலுக்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் அவர் பயன்படுத்தினார்.
சிந்தனைச் சுதந்திரம் மூலம் துணிச்சலையும், உறுதியையும் நிலைநாட்ட முடியும் என்று அவர் நம்பினார்.
பொது வாழ்வில், மக்களின் கேள்விகளுக்கு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் பொறுப்பேற்று உரிய பதிலளிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஜனநாயக விழுமியங்களுக்காக தனது வாழ்நாளை அவர் அர்ப்பணித்தார். துணிச்சலாக பத்திரிகை நடத்தினார். இன்று துணிச்சலாக கருத்துகளை வெளியிட அவர்தான் காரணம்.
This story is from the January 03, 2026 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Cuddalore
கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சரிவு
நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, கடந்த ஏப்ரல் மாத நிலக்கரி உற்பத்தியில் 9.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Cuddalore
ஒரே நாளில் 10ஆயிரம் பேர் வருகை: கன்னியாகுமரியில் இரவு 7 மணி வரை நீடித்த படகு சேவை
கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை பூம்புகார் படகு சேவை நீடித்தது.
1 min
May 02, 2026
Dinamani Cuddalore
13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Cuddalore
பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
2 mins
May 02, 2026
Dinamani Cuddalore
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Cuddalore
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Cuddalore
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Cuddalore
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Cuddalore
ஐஓபி லாபம் 43% வளர்ச்சி
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
May 01, 2026
Listen
Translate
Change font size
