Versuchen GOLD - Frei
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
Dinamani Cuddalore
|January 03, 2026
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
-
நாட்டில் அவசர நிலை பிரகடனத்தின்போது அதை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுத்து, கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மேலும், இலக்கியமும், அச்சமில்லாமல் கருத்து தெரிவிப்பதும் ஜனநாயகத்துக்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் மூன்றாம் ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகைத் துறையின் முன்னோடியுமான மறைந்த ராம்நாத் கோயங்காவின் நினைவாக சிறந்த இலக்கியப் படைப்பு எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. நிகழாண்டுக்கான விருதுகளுக்கு தேர்வான கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த புனைவுப் பிரிவில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சுபிதாபாவுக்கும் (நூல்: டேல்ஸ் ஃபிரம் தி டான்லிட் மவுன்ட்டன்ஸ்), அபுனைவு பிரிவில் எழுத்தாளர் சுதீப் சக்கரவர்த்திக்கும் (நூல்: ஃ பாலன் சிட்டி), அறிமுக எழுத்தாளர் நேஹா தீக்ஷித்துக்கும் (நூல்: தி மெனி லைவ்ஸ் ஆஃப் சயீதா எக்ஸ்) விருதுகளையும், பரிசுத் தொகையையும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்த்திய உரை: சமூகத்துக்கான உயரிய சிந்தனைகளைக் கொண்டிருந்தார் ராம்நாத் கோயங்கா. பத்திரிகையை அறிவுசார் துணிச்சலுக்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் அவர் பயன்படுத்தினார்.
சிந்தனைச் சுதந்திரம் மூலம் துணிச்சலையும், உறுதியையும் நிலைநாட்ட முடியும் என்று அவர் நம்பினார்.
பொது வாழ்வில், மக்களின் கேள்விகளுக்கு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் பொறுப்பேற்று உரிய பதிலளிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஜனநாயக விழுமியங்களுக்காக தனது வாழ்நாளை அவர் அர்ப்பணித்தார். துணிச்சலாக பத்திரிகை நடத்தினார். இன்று துணிச்சலாக கருத்துகளை வெளியிட அவர்தான் காரணம்.
Diese Geschichte stammt aus der January 03, 2026-Ausgabe von Dinamani Cuddalore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Cuddalore
Dinamani Cuddalore
டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை
டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinamani Cuddalore
பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.
2 mins
January 08, 2026
Dinamani Cuddalore
உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.
3 mins
January 08, 2026
Dinamani Cuddalore
அதிமுக கூட்டணியில் பாமக
எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு
1 min
January 08, 2026
Dinamani Cuddalore
எண்ணமே வாழ்வு!
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.
2 mins
January 08, 2026
Dinamani Cuddalore
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி
ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.
1 min
January 07, 2026
Dinamani Cuddalore
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Cuddalore
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Cuddalore
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Cuddalore
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Listen
Translate
Change font size
