Facebook Pixel உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல்

Dinamani Chennai

|

June 11, 2025

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற பல்வேறு கட்சியினர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியை தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல்

அப்போது, இந்தியாவின் குரல் வெளிநாடுகளில் ஒலித்தது அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது என்று பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலம் ஏவுகணைகளை வீசி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், பல்வேறு கட்சிகளின் முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள் 50 பேர் உள்ளிட்டோர் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவினர் 33 வெளிநாட்டு தலைநகரங்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு சென்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய தேசம் ஒற்றுமையுடன் இருப்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்தக் குழுக்களை மத்திய அரசு அனுப்பிவைத்தது.

பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், வைஜயந்திபாண்டா, காங்கிரஸைச் சேர்ந்த சசி தரூர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜா, சிவசேனையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே ஆகியோர் தலைமையில் அந்தக் குழுக்கள் தனித்தனியாகப் பயணித்தன.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

2026-ஆம் ஆண்டுக்கான நைட்டிங்கேல் விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்

நிகழாண்டுக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

நாட்டில் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டமில்லை: பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

மேற்காசிய போர் தாக்கங்களால் நாட்டில் பொது முடக்கம் அமலாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உறுதிபடத் தெரிவித்தார்.

time to read

1 mins

May 13, 2026

Dinamani Chennai

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Chennai

வண்டலூர் பூங்காவில் ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்

விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தூர் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்

டிடிவி. தினகரன் அறிவிப்பு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

இன்று தொடங்கும் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் போட்டி

இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, இந்திய ஸ்குவாஷ் அகாதெமி (ஐஎஸ்ஏ) சார்பில் ஹெச்சிஎல் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மே 13 முதல் 16 தேதி வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

போதைப் பாக்கு பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

டாஸ்மாக் கடைகள் மூடல்: பெ.சண்முகம் வரவேற்பு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்: மாற்றுப் பணி வழங்க கோரிக்கை

தமிழகத்தில் மூடப்பட உள்ள 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size