அதில் முதல் முறையாக காவல்துறையின் துப்புத் துலக்கும் பிரிவில் மோப்பம் அறியும் நாய்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒரு நாய் அப்படத்தில் தனது திறமைகளையெல்லாம் காட்டியதைப் பார்த்து மக்கள் வாயைப் பிளந்தார்கள். அப்பொழுதுதான் முதல் முறையாக சென்னை காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டு என்று இங்கிலாந்து நாட்டில் அழைக்கப்படும் காவல் பிரிவுடன் ஒப்பிட்டுக் கூற ஆரம்பித்தார்கள்.
அந்த மாயையெல்லாம் வெகுநாள் நீடிக்கவில்லை. 1973க்கு முன்பு நடைமுறையிலிருந்த குற்றவியல் நடைமுறைச் சட்டம் காவல்துறை ஆணையருக்கு குற்றவியல் நடுவர் அதிகாரத்தை வழங்கியிருந்தது. நடைமுறையில் காவல் ஆணையர் எந்தவொரு கைதிக்கும் ஜாமீன் வழங்கியதில்லை. ஒவ்வொரு நாளும் சென்னையில் கைது செய்யப்பட்ட கைதிகளின் ஜாமீன் மனுக்களை அவர் ஒரே நிமிடத்தில் தள்ளுபடி செய்து தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விடுவார். அதற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மறுபடியும் ஜாமீன் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற வேண்டும். இந்த நாடகத்தையெல்லாம் முடிவு கட்டும் வகையில் 1973ல் புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட நடுவர் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதுடன் கைது செய்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் முன்ஜாமீன் தாக்கல் செய்வதற்கும் சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
கடந்த 50 ஆண்டுகளில் காவலர்கள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து வேலைகளிலேயே பெரும்பான்மையாக ஈடுபடுத்தப்பட்டார்கள். தொழிலாளர் போராட்டங்களில் கொத்துக் கொத்தாக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்--பட்டனர். ஆனால் கிரிமினல் குற்றங்களை துப்புத் துலக்கி அதன் மூலம் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் நடைமுறையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.
This story is from the May 2023 edition of Andhimazhai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 2023 edition of Andhimazhai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.