CATEGORIES
Categories
கோதை நாச்சியாரின் அன்புப் பரிசு!
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர். தற் போது எனக்கு 71 வயதாகிறது. கோதை நாச்சியாரின் தீவிர பக்தை யான எனக்குத் திருமணம் நடை பெற்றது கூட அவளது அருளால் தான். அது மட்டுமின்றி, எனது வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் அவளே காரணம் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை.
சனி தோஷம் தீர்ப்பார் ஸ்ரீ கூர்மநாதர்!
ஆபத்து வருங்காலத்தில் ஆமை தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தற்காத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தமது ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் எனும் அரிய தத்து வத்தை ஆமை (கூர்ம) அவதாரம் எடுத்ததன் மூலம் உலகுக்கு விளக்கினார் ஸ்ரீ மகாவிஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல் 'கூர்மம்.'
மகோன்னத மாயவன் தேரோட்டம்!
உலகின் மிகவும் பழைமையான ரத யாத்திரையாக பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரை கருதப்படுகிறது. புகழ் பெற்ற இந்த ரத உத்ஸவம் வருடா வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.
வேதத்துக்கு மணம் கூட்டிய பரிமள ரங்கநாதர்!
காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள ஐந்து அரங்கநாதரின் ஆலயங்களை, ‘பஞ்சரங்க க்ஷேத்ரம்" என்பர். அவை ! ஆதிரங்கம் ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்), அப்பாலரங்கம் திருப்பேர்நகர் என்ற கோவிலடி, மத்தியரங்கம் ஸ்ரீரங்கம், சதுர்த்தரங்கம் சாரங்கபாணி கோயில், கும்பகோணம், பஞ்சரங்கம் பரிமள ரங்கநாதர் கோயில் திருஇந்தளூர்.
குபேரனுக்குக் கிடைத்த பொன் வில்வ சாரம்!
திருச்சி மாவட்டம், நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். திருவண்ணாமலையார் வழிகாட்ட, குபேரனின் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஆலயம் இது.
இசைவாணி இதயவாணியாவாள்!
அம்பாளின் வாக்கு மேன்மையே இசை வடிவாகிறது என்பதனை, சரஸ்வதியையும் வீணையையும் வைத்து ஆதிசங்கரர் காட்டினார். அபிராமி பட்டரோ, அதனையே அம்பாளிடம் நேரடியாக உரைத்தார்.
ஆத்தாடி மாரியம்மா...!
தெய்வம் பேசுமா? அந்த அற்புதம், கண்களை மூடிக் காணவேண்டிய காட்சி கொடுக்கல், வாங்கல் பரிவர்த்தனை போலவே தோற்றமளித்தாலும் எதிர்பாராத் தன்மையும் நிச்சயமின்மையும்தான் ஆன்மிகத்தின் வித்தியாசங்கள். மனிதன் யாரைப் பற்றிக்கொள்ளுகிறான் என்பதல்ல... எப்போது, எப்படிப் பற்று கிறான் என்பதே பக்தியின் சாரம்.
அனுமனின் கர்வம்!
அனுமனின் வாலில் ராவண சேனை பற்ற வைத்த நெருப்பு, லங்காபுரியையே பொசுக்கியது. பாய்ந்து பாய்ந்து எல்லா இடங்களிலும் நெருப்பைப் பற்ற வைத்தான் அனுமன்.
மனக்குறை தீர்த்த அத்தனுர் அம்மன்!
“எங்கள் குலதெய்வம் சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில், அம்மன்கோயில் என்கிற ஊரில் அமைந்திருக்கும் அத்தனூர் அம்மன் ஆவாள்.
வைகுந்தத்தை வெறுத்த அடியார்கள்!
பகவானை அர்ச்சா ரூபத்தில் வணங்குவதில்தான் எத்தனை இன்பம்! மனதுக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தருவது கோயில்களுக்குச் சென்று சுவாமியை வழிபடுவதுதான்.
விதி!
இந்திர பனின் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்தக் கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அந்தக் கிளியை பரிசோதித்த மருத்துவர், "இனி, இது பிழைக்காது" என்று கூறி விட்டார்.
நீயல்லால் தெய்வமில்லை!
“வெல்லமாக இருக்கும்வரையில் எறும்பு தின்றால் மாத்திரம் மெதுவாய் காலியாகும் பாத்திரம், பானக பானமாய் மாறும்போது உடனே காலியாகும்” என்பார் என் உறவினர் ஒருவர். அதுபோல், உள்ளே கனப்பதை ஒளித்து மறைப்பதல்ல, பகிர்ந்து உரைப்பதே சிறப்பு.
பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யலாம் வாங்க!
வேதாத்திரி மஹரிஷியின் பயிற்சிகள் அனைத்தும் இயற்கையோடு நம்மை இணைப்பவை.
சூரிய கிரகண பூஜை!
வானில் நடைபெறும் சூரிய, சந்திர கிரகணங்கள் விசேஷமானவை. உலகமே நெருக்கடியான நேரத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில் 21.6.2020 அன்று காலை சுமார் 9.15 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை மிக நீண்ட நேரம் நிகழவிருக்கிறது சூரிய கிரகணம்.
தெரிந்த கோயில்கள்; தெரியாத தகவல்கள்!
* திருமலை திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் பெருமாளின் பாதச் சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்பிகையின் திருநாமங்கள்!
அம்பாளின் திருநாமங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதில்தான் எத்தனை இன்பம்! தியானத்தின் வழியாக அம்பாளின் திருவடியிலேயே விழுந்திருந்த அபிராமி பட்டருக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்!
கலை நயம் கொண்ட பனவாசி ஸ்ரீ மதுகேஸ்வரர்!
கி.பி.345ம் ஆண்டுவாக்கில் பனவாசியில், கடம்பா வம்சத்தினரின் ஆட்சி துவங்கி, 200 ஆண்டு காலம் தொடர்ந்தது. இவர்கள் கர்நாடகம் முழுவதையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.
கொம்மடிக்கோட்டை பாலா திரிபுரசுந்தரி
தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக் கோட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோயில். இக்கோயில் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. பல சித்தர்கள் பூஜித்த ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி இங்கு குழந்தை வடிவமாக பட்டுப்பாவாடை, சட்டையுடன் ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களைப் பழிக்கும் மூக்குத்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இவளை வணங்கினால் சகல சௌபாக்கியங்களு வாழ்க்கையில் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
ஆடல் அரசனுக்கு அபிஷேகம்!
தில்லை நடராஜப்பெருமானின் திருமஞ்சன நாளாக ஆனி உத்திரம் சிறப்புப் பெறுகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் காண்கிறார்.
அன்பை அள்ளித்தரும் நம்பிக்கை!
சிந்தனை, செயல் இவை இரண்டுமே வாழ்க்கைத் தேரின் இரண்டு சக்கரங்கள். சக்கரங்கள் சரியாகச் சுழல்வதற்கும், சரிந்துவிடாமல் இருப்பதற்கும் அச்சாணி அத்தியாவசியம். அந்த அச்சாணிதான் நம்பிக்கை! உலக வாழ்க்கைக்கே நம்பிக்கைதான் பிராணப்பொருள் எனும்போது, குடும்ப வாழ்க்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?!
இழந்ததை மீட்டுத் தரும் அஷ்டமி திதிகள்!
ஒவ்வொரு தமிழ் மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
ஸ்ரீவண் புருஷோத்தமப் பெருமாள்
திருநாங்கூரில் உள்ள பதினொரு திவ்ய தேசங்களில் 6ஆவது திவ்ய தேசப் பெருமாள் ஸ்ரீவண் புருஷோத்தமன். சூலபாணிக்கும் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கும் அவர் மகனுக்கும் காட்சி கொடுத்தவர்.
முப்பெரும் தெய்வ சொரூபம்!
ஞான குருவான ஸ்ரீ தத்தாத்ரேயர் பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவரையும் ஓருருவாகக் கொண்டுத் திகழ்பவர். ஆனால், 'இவர் திருமாலின் வடிவமே. இதற்கு உதாரணமாக கருட புராணம், பிரம்ம புராணம் போன்றவற்றில் ஆதாரம் காட்ட முடியும்' என்று வாதிடுபவர்களும் உண்டு!
உள்ளத்தில் உறைந்த உமையொருபாகன்!
மதுரை மாநகரில் சொக்கநாதப் புலவர் என்றொருவர் இருந்தார். திருமலைநாயக்கர் காலத்தைச் சேர்ந்த இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் சொல்நடை, பொருள் நடையோடு மிகுந்த சுவையோடு இருக்கும்.
வாக்கு நல்கிய வள்ளல்!
நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே பெருஞ்சேரியில் உள்ளது அருள்மிகு சுவாதந்தர நாயகி சமேத ஸ்ரீ வாகீஸ்வரர் திருக்கோயில். அகன்ற பிராகாரம், கொடி மரம், நந்தி, பலிபீடம் இவற்றைக் கடந்ததும் மூன்று நிலை ராஜ கோபுரம் காட்சி தருகிறது.
வந்தாள் மஹாலக்ஷ்மியே...
செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் வீட்டில் மஹாலக்ஷ்மி குடியிருப்பதாகக் கூறுகிறோம். கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களை 'லக்ஷ்மி கடாட்சம் பொருந்தியவர்கள்' எனக் கூறுகிறோம். மஹாலக்ஷ்மியைப் பூஜிக்கும்போது காசுகளையும் பொன்னையும் வெள்ளியையும் வைத்து வணங்குகிறோம். பொன், பொருளுக்கு மட்டும்தான் மஹாலக்ஷ்மியின் மகிமை பொருந்துமா?
இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கை!
நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கையே அடங்கி விடுகிறது. இதைத்தான், ‘ச்ரத்தா', 'சபூரி' என்கிறார் மகான் ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா.
கதவை அடைத்துக் கொண்டாரா கடவுள்?!
கோயில்கள் பலவற்றிலும் கும்பாபிஷேகம் நடைபெற்று, நாற்பத்தெட்டு நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற்றிருப்பதைப் பார்த்திருப்போம். ஐயப்பன் வழிபாட்டுக் காலங்களில் மண்டல பூஜை, விரதங்களை பக்தர்கள் அனுசரிப்பதையும் கண்டிருப்போம். ஆனால், சமீபகாலமாக எப்போதும் கண்டிராத விதமாக ஆலயங்களின் திருக் கதவுகள் சுமார் அறுபது நாட்களுக்கும் மேல் மூடப்பட்டு இருக்கின்றன.
காசிக்கு நிகரான அஷ்ட பைரவர் திருக்கோயில்
சிவபெருமானின் அறுபத்து நான்கு மூர்த்தங்களில், பைரவரும் ஒன்று. 'பீரு' என்ற சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்' என்ற திருநாமம். பீரு என்றால் பயம் அல்லது பயம் தரக்கூடியவர் என்று பொருள்.
அம்பிகைக்குப் பிடித்த ஆபரணம்!
நாம் பொதுவாக திருமணம், பண்டிகை, திருவிழா என்று விசேஷமான இடங்களுக்குச் செல்வதாக இருந்தால், நீராடி, நல்லாடை உடுத்தி, சீவி சிங்காரித்து, அணிகலன்கள் பூண்டு புறப்படுவோம் இல்லையா? ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும்போதும், அதற்கேற்ப உடை, ஒப்பனை அலங்காரம் வெளிப்படும்.