Prøve GULL - Gratis
உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?
Dinamani Tiruchy
|August 28, 2025
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் பலர் இறந்துவிடுகின்றனர். பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
-
வரதட்சணை கொடுமை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரைப் பறித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி, 2020-ஆம் ஆண்டு 7,045 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு 6,516-ஆக சரிந்தது என்றாலும் கூட, அதனால் ஆறுதல் அடைய முடியாது.
2022-ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2,142 பெண்கள் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து பிகாரில் 1,057, மத்திய பிரதேசத்தில் 520, ராஜஸ்தானில் 451, மேற்கு வங்கத்தில் 427 பெண்கள் உயிரிழந்தனர். இதுதவிர ஹரியாணாவில் 234 பெண்கள், ஒடிஸாவில் 263 பெண்கள் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தில் சராசரியாக ஒரு லட்சம் பேர் அடங்கிய மக்கள்தொகையில் 1.9 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர். இது பிகாரில் 1.8, ஹரியாணாவில் 1.7, மத்திய பிரதேசத்தில் 1.2-ஆக உள்ளது.
எனினும் இது பாலின வன்முறையின் சின்னஞ்சிறிய பகுதியைத்தான் வெளிப்படுத்துகிறது. அதிலும் திருமண உறவில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் சரிவர கண்டுகொள்ளப்படுவதில்லை.
Denne historien er fra August 28, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Tiruchy
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Tiruchy
லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை
லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
October 29, 2025
Dinamani Tiruchy
தமிழ்நாடுடன் 'டிரா' செய்தது நாகாலாந்து
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை 'டிரா' ஆனது.
1 min
October 29, 2025
Dinamani Tiruchy
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Tiruchy
அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.
1 min
October 29, 2025
Dinamani Tiruchy
ஐஓசி நிகர லாபம் பன்மடங்கு உயர்வு
அதிகரித்த சுத்திகரிப்பு லாப விகிதங்கள் மற்றும் செயல் திறன் காரணமாக, அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) செப்டம்பர் காலாண்டில் பன்மடங்கு நிகர லாப உயர்வைப் பதிவு செய்தது.
1 min
October 28, 2025
Dinamani Tiruchy
தமிழில் மட்டுமே பேசுவோம்!
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
3 mins
October 28, 2025
Dinamani Tiruchy
30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.
1 min
October 28, 2025
Dinamani Tiruchy
அன்புள்ள ஆசிரியருக்கு...
மேடைகளில் பேசத் தொடங்கும் காலத்தில் தயக்கம் ஏற்படுவது இயல்புதான் (‘தயக்கம் வேண்டாம்...’- துணைக் கட்டுரை- பெ. சுப்ரமணியன், 20.10.25). பள்ளிகளில் பல வகைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் தயக்கம் தவிர்க்கப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், வெளிப்படையான விவாதம், மனம் திறந்த கலந்துரையாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல சிந்தனைக்குப் பழக்கப்படுவதுமே மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் கருத்தொற்றுமைக்கும் மன இருள் அகன்று அன்பு ஒளிவீசவும் வழிகோலும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்பதை மனதில் கொண்டால் ஆலம் விதைக்கு சுவர் வழிவிடாது.
1 min
October 28, 2025
Translate
Change font size

