Prøve GULL - Gratis
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
Dinamani Tiruchy
|October 29, 2025
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
அப்போதெல்லாம் திமுகவின் பொதுக் கூட்டம் இரண்டு வகையாக இருக்கும். சாதாரண பொதுக்கூட்டம், சிறப்புப் பொதுக்கூட்டம் என்று வகைப்படுத்தப்படும். சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். சிறப்புக் கூட்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்களுக்கு ஒரு ரூபாய்; பெண்களுக்கு எட்டணா. அந்தக் காலத்தில் பெண்களையும் அரசியல் கூட்டங்களுக்கு அழைக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளின் மேடைப்பேச்சு இருந்தது. அவர்கள் பெண்களுக்காகவும் பேசினார்கள். தினந்தோறும் அண்ணாவும் மூத்த தலைவர்களும் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.
இப்போது பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள், விளம்பர விளக்குகள், இதுதவிர கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை கூட்டத்தை நடத்துபவர் செய்துதர வேண்டும். இதேபோல், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரவேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் இந்த வசதி எல்லாம் செய்து தரவில்லை. அப்போது, கூட்டத்துக்கு வந்தவர்கள் தானாக வந்தவர்கள்தான். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் தரையில்தான் உட்காருவார்கள்.
அண்ணா கட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மாவட்டச் செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர் வரை எல்லோர் பெயரும் சொல்லி 'அவர்களே' என்று அழைத்து அதன்பின்தான் தமது உரையைத் தொடங்குவார். இதனால், அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளூரில் மதிப்பு மரியாதை கூடியது. சில பெயர் விடுபட்டுப் போனால் தமது உரையின் நடுவில் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். அண்ணாவின் இந்த அரசியல்பாணி பின்னாளில் எல்லா கட்சியினராலும் பின்பற்றப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.
கட்சித் தொண்டர்களை 'தம்பிகளே' என்றுதான் அழைப்பார் அண்ணா. கட்சியில் குடும்ப பாசத்தை புகுத்திய புதுமையாளர் அண்ணா. அதன் பிறகு கருணாநிதி 'உடன்பிறப்பே' என்று அழைத்தார். எம்ஜிஆர் 'என் ரத்தத்தின் ரத்தமே' என்று அழைத்தார். இவையெல்லாம் தொண்டர்களிடையே இடைவெளி இல்லா நெருக்கத்தை அதிகரித்தது.
Denne historien er fra October 29, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruchy
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruchy
உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
June 07, 2026
Dinamani Tiruchy
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Dinamani Tiruchy
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Tiruchy
டபிள்யுடிஆர் செஸ்: வைஷாலி சாம்பியன்
நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுடிஆர் மகளிர் செஸ்டூர் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 min
June 07, 2026
Dinamani Tiruchy
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruchy
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tiruchy
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 07, 2026
Dinamani Tiruchy
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Listen
Translate
Change font size
