Newspaper
DINACHEITHI - TRICHY
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாம் 1.7.2025 மற்றும் 2.7.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
கோவை மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள், ஊழியர்கள் சுமார் 1200 பேர் நேற்று பணிகளை புறக்கணித்து தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
நாகர்கோவிலில் இன்று ஷோரூமில் தீ விபத்து-16 கார்கள் எரிந்து சேதம்
நாகர்கோவில் ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சோந்தவா கோவிந்தன் (வயது 74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா. இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சோந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கோவிந்தன் வீட்டுக்குச் சென்ற அவரது மருமகள் அபிராமி, அவரது தங்கை சுகந்தா இருவரும் வெங்கடேஷ் பெயரில் உள்ள சொத்துகளை அபிராமி பெயரில் மாற்றித்தரும்படி கேட்டுள்ளனா. அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை தொல்லை கொடுக்கக் கூடாது என்று கோவிந்தன் கூறியுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும்
பீஜிங்,ஜூன்.27இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான்,ஈரான்,கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகியநாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்மாநாடு,சீனாவின் கிங்டாவோவில் நடந்துவருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பரமக்குடியில் இன்று மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜீ.கங்காதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- பரமக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வரும் பாம்பு விழுந்தான், செந்தமிழ் நகர், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா காலனி, சத்தியமூர்த்தி காலனி ஆகிய பகுதிகளில் இன்று (27.6.2025) வெள்ளிக் கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான்
உளவுத்துறை தகவல்
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
500 மாணவ- மாணவியர்கள் பங்கேற்ற போதைபொருள் விழிப்புணர்வு பேரணி
ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டினால் மனித சமூகத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்து இந்த நாளில் சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் இன்று 27.06.2025 அன்றுகாலை09:00மணிமுதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரியபராமரிப்புபணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்2:00மணிக்குள்பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
தூத்துக்குடி,ஜூன்.27- | புகாரின்பேரில், தென்பாகம் தூத்துக்குடி, அண்ணாநகர் | காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 6-வது தெருவைச் சேர்ந்த திருமுருகன் சம்பவ ஆதித்யா மகன் முருகேசன் இடத்திற்கு நேரில் சென்று (வயது 60). இவர் அண்ணாநகர் விசாரணை நடத்தினார். 7வது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23ம்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு 24ம்தேதி காலை திறக்க சென்றுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவில் தரையில் மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் கிளே டவுன்ஷிப் நகரில் சொகுசு நட்சத்திர விடுதி உள்ளது. குளக்கரை ஓரத்தில் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை சங்கத்தினர் தர்ணா போராட்டம்
வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் தர்ணா போராட்டம் நடந்தது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
தொழில் தொடங்கிட கடனுதவி
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதியதாக தொழில் முனைவோரை உருவாக்கிடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM-ARISE) மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.10லட்சம் வரை கடனுதவி ரூ.3.50 லட்சம் அல்லது 35சதவீத மானியத்தொகையுடனும், PMAJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.1லட்சம் வரை கடனுதவி ரூ.50,000அல்லது 50 சதவீத மானியத்தொகையுடனும் கடனுதவி வழங்கப்படுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
மாயமான மீனவர் வீட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று ஆறுதல்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த பூபாளன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது காணாமல் போன தகவல் அறிந்து, அவரது வீட்டுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் தலைமை தாங்கி பேசினார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில் பாதையில் மது போதையில் காரை ஓட்டிய இளம்பெண்
தெலுங்கானாவின் சங்கர்பள்ளி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த ரெயில்வே ஊழியர்கள் முயன்றனர். சிறிது தூரம் அவரை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவிடம் இருந்து இங்கிலாந்து வாங்கும் எப்-35 போர் விமானத்தில் உள்ள சிறப்புகள்
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன போர் விமானமாக எப்-35 போர் விமானம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவம் தவிர்த்து ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த எப்-35 ரக போர் விமானம் ஒன்றின் விலை ரூ.860 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
2 கல் குவாரிகளுக்கு ரூ. 15 கோடி அபராதம்
16 குவாரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
போதைப்பொருள் விவகாரம்: கண்காணிப்பு வளையத்துக்குள் 10 நடிகர்-நடிகைகள்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
போலீஸ் விசாரணைக்கு பயந்து ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தங்கொலை
வேடசந்தூர் அருகே சோகம்
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா
விண்வெளியில் எப்படிநடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரிமலைப்பகுதி உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...
இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - TRICHY
2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம்
லீட்ஸ் ஜூன் 27இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
1 min |
