சர்க்கரை நோய்: அச்சமும் வேண்டாம்! அலட்சியமும் வேண்டாம்
Penmani
|July 2025
ஒருகாலத்தில் பணக்கார வியாதி, பணக்கார்களை மட்டும் பாதிக்கும் வியாதி எனப்பட்ட “நீரிழிவு நோய்" என்னும் சர்க்கரை வியாதி இப்பொழுது எங்கும் நீக்க மற நிறைந்திருப்பதை காண்கிறோம்.
எனது 45-ஆண்டு கால மருத்துவ சேவையில் புதிதாக ஒருவருக்கு சர்க்கரைநோய் கண்டு பிடிக்கப்பட்டதை தெரிவித்தவுடன் கண்கலங்கி கண்ணீர் விட்டவர்களும் சர்க்கரைநோய் வந்து விட்டதே என தூங்காத இரவுகளை கழித்தவர்களும் சர்க்கரை நோய் தாக்கிய பின் அந்த வியாதியைப்பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியபோக்கால் பிற்காலத்தில் நிவர்த்தி செய்ய முடியாத பின் விளைவுகளால் அவதிப்பட்டவர்களையும் அல்லது மரணத்தை தழுவியவர்களையும் பார்த்திருக்கிறேன்.
இவ்விரு ரக நோயாளிகளின் மனப்பக்குவமும் ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.
சர்க்கரை நோய் இன்றைய நிலவரப்படி அரிதான நோயல்ல!
2015-ம் ஆண்டு கணக்குபடி உலகில் 415 மில்லியன் நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 642 மில்லியனாக 2040 ஆண்டு வாக்கில் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
உலக அளவில் சீனாவில் தான் அதிக அளவில் சர்க்கரை நோயாளிகள் உண்டு.
அதற்கு அடுத்தப்படி நமது இந்தியா நாடு வருகிறது. தற்பொழுது இந்தியாவில் 70 மில்லியன் அல்லது அதற்கு அதிகமாக 2030 ஆண்டு வாக்கில் உயரும். மிக விரைவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகளவில் முதலிடம் பிடித்து விடும் இந்தியா.
ஏன் இந்த அவலம்?:நாம் இப்பொழுது மிகவும் சோம்பேறி களாகிவிட்டோம். மிக அருகாமையில் உள்ள கடைகளுக்குச் செல்லக்கூட நடப்பதில்லை. இருச்சக்கர, 4 சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறோம்.
உந்து வண்டியை (சைக்கிள்) அடியோடு மறந்து விட்டோம்.
கிரைண்டர், மிக்ஸி வாஷிங் மிஷன்களெல்லாம் உடல் உழைப்பை மறக்க வைத்துவிட்டன. மின் விசிறியை இயக்குவதற்கு கூட ரிமோட் வந்து விட்டது. அளவுக்கு மீறி நாக்கு சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்கிரிம்கள், கேக்குகள் அதிலும் பட்டர்ஸ்காட்ச் கேக், அசைவபிரியாணிகளை தின்று சர்க்கரை நோயை அறை கூவி அழைத்து விட்டோம்!
தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி வீட்டில் சமைக்காமல் ஆன்லைன் ஆர்டர் கொடுத்துப்பழகி, உடல் பருமனைப் பற்றி கவலைப்படாமல் இருத்தல் ஆகியன சர்க்கரை நோயை கொடி கட்டி பறக்க வைத்து விட்டது. உடல் உழைப்பு இல்லாவிட்டால் வரும் முதல் நோய் சர்க்கரை நோயாகும்.
このストーリーは、Penmani の July 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Penmani からのその他のストーリー
Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025
Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025
Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025
Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025
Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025
Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025
Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size

