1. முன்னுரை
தமிழ் மாதங்கள் 12. நட்சத்திரங்கள் 27. திதிகள் 15. மாதங்களும் திதிகளும் இணைந்து சில மகத்தான பண்டிகை அல்லது விரத நாட்களாக மலரும். அதைப் போலவே மாதங்களும் நட்சத்திரங்களும் இணைந்து சில மகத்தான தினங்களாக மலரும். உதாரணமாக சித்திரையில் திருவாதிரை ராமானுஜரின் அவதார நாள். வைகாசியில் விசாகம் முருகனுக்கு உரிய நாள். நமமாழ்வாரின் ஜெயந்தி நாள். ஆனியில் சுவாதி கருடாழ்வாரின் ஜெயந்தி நாள்.ஆடியில் கிருத்திகை முருகனுக்கு உரிய நாள். ஆவணியில் அவிட்டம் மிகச் சிறப்பான பண்டிகை நாள். புரட்டாசியில் திருவோணம் திருப்பதியில் பிரம் மோற்சவம் கொண்டாடும் நாள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தையில் வரும் பூச நட்சத்திரம் அற்புதமான நாள். தைப்பூசம் மற்றும் தை கிருத்திகை, தை. அமாவாசை இவற்றின் சிறப்புகளை முப்பது முத்துக்களாக நாம் காண இருக்கின்றோம்.
2. பீஷ்மர் காத்திருந்த மாதம்
தை மாதம் மகர ராசிக்கு உரிய மாதம். உத்தராயணத்தின் முதல் மாதம் தை. இந்த மாதத்தில்தான் தெற்கு முகமாக சஞ்சரித்த சூரியன் வடக்கு முகமாக அடி எடுத்து வைக்கின்றார். அதனால் இது புனிதமான தினமாக கொண்டாடப்படுகிறது. உத்தராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துத் தான் மஹாபாரதத்தில் பீஷ்மாச்சாரியார் அம்புப் படுக்கையில் காத்திருந்தார். அதனால் தையில் வரும் அஷ்டமி தினம் பீஷ்மாஷ்டமி என்று வழங்கப்படுகின்றது. பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக் கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியையும், பீஷ்மரின் ஆசியையும், ஒருசேரப் பெறலாம்.
3. சுப காரியங்களுக்காக காத்திருக்கும் மாதம்
தை மாதத்தின் தொடக்கம் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. காரணம், தட்சணாயணத்தின் கடைசி மணித்துளியும், உத்திராயணத்தின் முதல் மணித்துளியும் உறவாடும் உன்னத நேர மல்லவா அது. அப்பொழுது செய்யப்படும் வழிபாடும், தானமும், தவமும்நூறு மடங்கு பலனைத் தரும் என்கின்ற நம்பிக்கை இருக் கிறது. தை மாதம் மகர மாதம் என்று பார்த்தோம். காரணம் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம்தான் தை மாதம். இந்த மகர ராசி என்பது சனிகிரகத்துக்குரிய ராசி.
Esta historia es de la edición January 16, 2024 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 16, 2024 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.
தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்
நம் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.
நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்
(தையில் வரும் பூசம், கிருத்திகை, அமாவாசை, அஷ்டமி, சப்தமி )
லயிக்க வைக்கும் லெபாக்ஷி
இராமாயணத்தின் முக்கிய நிகழ்வான ராவணன் சீதா தேவியை கடத்திச் செல்வதைப்பார்த்த பறவைகளின் அரசனான ஜடாயு ராவணனுடன் சண்டையிடுகிறார்.
திரிமூர்த்தி
சிவாலயங்கள் தோறும் கருவறையில் பிரதிட்டை செய்யப் பெற்று காணப்பெறு வது சிவலிங்கத் திருமேனிகள்தாம். வட்டம் அல்லது சதுரபீடத்தின் மேல் பாணத்துடன் திகழும் சிவலிங்க வடிவத்தினைப் பொதுவாக சிவமூர்த்தமாக மட்டுமே நாம் கருதுகிறோம்.
ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?-என்ன செய்ய வேண்டும் ?
ராகு-கேது பெயர்ச்சி நடந்திருக்கிறது. 8.10.2023 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைந்துவிட்டன.
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி
இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங் களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட் டியத்தில் தோய்ந்திருந்தனர்.