Intentar ORO - Gratis
மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!
Dinamani Coimbatore
|May 11, 2025
தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.
வட சென்னையைச் சேர்ந்த இவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலில் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனது ஆராய்ச்சிப்பணிகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம், கவிதைகள் என 13 புத்தகங்களை தமிழில் எழுதியிருக்கிறார்.
வியாசர்பாடியில் 'கலாம்-சபா' என்ற இளையோர் நூலகம்-வழிகாட்டி மையத்தை அமைத்திருக்கும் அவர், நாட்டில் புதிய அறிவியல் எழுச்சியை ஏற்படுத்த மாணவர்கள், இளைஞர்களைத் தவறாமல் சந்தித்து வருகிறார்.
அவரிடம் ஒரு சந்திப்பு:
தேசியத் தொழில்நுட்பத் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
1998 மே 11-இல் போக்ரானில் அணுசக்தி சோதனையில் இந்தியா வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி, பல துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி தேசத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்த மே 11-ஆம் தேதி தேசியத் தொழில்நுட்பத் தினமாக, 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
2001-இல் நிகழ்ந்த தேஜஸ் போர் விமானத்தின் முதல் வெள்ளோட்டம், 2008-இல் நடைபெற்ற சந்திரயான்-1 வெற்றி, 2012-இல் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றி, 2019-இல் பெற்ற செயற்கைக்கோள் எதிர் ஏவுகணை 'சக்தி திட்டம்' வெற்றி, 2024-இல் நிகழ்ந்த சந்திரயான்-3 வெற்றி என இந்தியா தொழில்நுட்பத் தேசமாக தற்போது உலக அரங்கில் மிளிர்கிறது. இதைப் போல இன்னும் பல துறைகளில் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இளையோரை ஆற்றுப்படுத்த தேசியத் தொழில்நுட்ப தினம் உத்வேகம் தரும்.
ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பெயர்கள் பேசப்பட்ட இந்திய வகுப்பறைகளில், பின்னர் சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் போன்ற இந்தியப் பெயர்களும் சேர்த்து உச்சரிக்கப்பட்டன. படிப்படியாக அப்துல் கலாம், எம்.எஸ். சுவாமிநாதன், சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, கே.சிவன் போன்ற இந்தியர்கள் பேசப்படுவது சுதந்திர இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வேர்களின் நீளத்தை அளக்காமலே நமக்கு அறிவிக்கிறது. இவர்கள் தமிழர்கள் என்பதில் நாம் மார்தட்டிக் கொள்ளலாம்.
Esta historia es de la edición May 11, 2025 de Dinamani Coimbatore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்
விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
1 min
January 25, 2026
Dinamani Coimbatore
பறவைகளைக் காக்க தூரிகை!
'பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்றார் கவிஞர் கண்ணதாசன்.
2 mins
January 25, 2026
Dinamani Coimbatore
மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் விளம்பர தூதர் நடிகர் எம்.சசிகுமார்
மினிஸ்டர் ஒயிட் ஆடைகள் விற்பனை நிறுவனம் தனது விளம்பர தூதராக நடிகரும், இயக்குநருமான எம். சசிகுமாரை அறிவித்துள்ளது.
1 min
January 25, 2026
Dinamani Coimbatore
திருநங்கைகள் வாழ்க்கையில் திருப்புமுனை
மனித நாகரிகம் உருவாகிய காலகட்டத்தில் இருந்தே சமூக அங்கீகாரம், சமூக உரிமை, கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, குடும்பம் என அனைத்து நிலைகளிலும் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
2 mins
January 25, 2026
Dinamani Coimbatore
புறநானூற்றில் ஒரு தம்பி
புறநானூறு பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவேடு, சங்ககாலம் தந்த சரித்திரம்.
1 min
January 25, 2026
Dinamani Coimbatore
இளநாகனாரின் நற்றிணைப் பாடல் திறன்
அகப்பொருள் சுவை நிரம்ப இளநாகனார் எனும் சங்கப் புலவர் பாடியவையாக நற்றிணையில் பாலைத் திணையில் ஒன்றும் (205) நெய்தல் திணையில் ஒன்றுமாக (231) இரு பாடல்கள் காணக் கிடைக்கின்றன.
2 mins
January 25, 2026
Dinamani Coimbatore
இளம் தலைமுறையினர் ஆன்மிக சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை
2 mins
January 25, 2026
Dinamani Coimbatore
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்...
அம்மூவனார் எழுதிய குறுந்தொகைப் பாடல் (163) ஒன்றில் தலைவியின் துயரம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1 mins
January 25, 2026
Dinamani Coimbatore
தகவல்களை மட்டுமல்ல; உணர்வுகளையும்...
திருச்சி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத் தலைவரான விஜயகுமார், லால்குடியை பூர்விகமாகக் கொண்டவர்.
1 min
January 25, 2026
Dinamani Coimbatore
கவனம் ஈர்த்த பிற மொழிப் படங்கள் - 2025
கடந்த ஆண்டுகளைப் போன்றே சென்ற ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.
2 mins
January 25, 2026
Translate
Change font size

